பிகார் மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு கடந்த மே 4ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஆனால் நிலைமை இன்னும் சீரடையாத சூழல் நிலவுகிறது. நேற்று ஒரேநாளில் புதிதாக 9,863 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 74 பேர் பலியாகி இருக்கின்றனர். இந்நிலையில் முதல்வர் நிதிஷ் குமார் தனது ட்விட்டரில், பிகார் மாநில அமைச்சர்கள், அரசு அதிகாரிகளுடன் கொரோனா நிலவரம் குறித்து கேட்டறிந்தேன். இதன் தொடர்ச்சியாக மே 16ஆம் தேதியில் இருந்து அடுத்த 10 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளேன். அதன்படி வரும் மே 25ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக பிகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறுகையில், அனைத்து மருத்துவமனைகளிலும் வென்டிலேட்டர்கள், படுக்கை வசதிகள் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து மக்களும் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். போதிய சரீர இடைவெளியை பின்பற்ற வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
போதிய இருப்பு வந்தவுடன் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். நிச்சயம் கொரோனா பாதிப்பை விரட்டி அடிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். பிகார் மாநில மருத்துவ மற்றும் சுகாதார ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஸ்வநாத் சிங் பேசுகையில், நடப்பாண்டில் பிகார் மாநிலத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் பணியில் இருந்த 40 செவிலியர்கள் உயிரிழந்தனர்.
மூன்று ஷிப்ட்களில் செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனால் பணி நேரங்களில் போதிய தங்கும் வசதிகள் மற்றும் உணவு வசதிகளை துறை சார்பில் ஏற்படுத்தி தருவதில்லை. இதனால் செவிலியர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர். இதற்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக பிகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறுகையில், அனைத்து மருத்துவமனைகளிலும் வென்டிலேட்டர்கள், படுக்கை வசதிகள் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து மக்களும் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். போதிய சரீர இடைவெளியை பின்பற்ற வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
போதிய இருப்பு வந்தவுடன் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். நிச்சயம் கொரோனா பாதிப்பை விரட்டி அடிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். பிகார் மாநில மருத்துவ மற்றும் சுகாதார ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஸ்வநாத் சிங் பேசுகையில், நடப்பாண்டில் பிகார் மாநிலத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் பணியில் இருந்த 40 செவிலியர்கள் உயிரிழந்தனர்.
மூன்று ஷிப்ட்களில் செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனால் பணி நேரங்களில் போதிய தங்கும் வசதிகள் மற்றும் உணவு வசதிகளை துறை சார்பில் ஏற்படுத்தி தருவதில்லை. இதனால் செவிலியர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர். இதற்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.