ஆப்நகரம்

Aishwarya Rai: ஐஸ்வர்யா ராய்க்கு நேர்ந்த கொடுமை; பிரச்சாரத்தில் வெடித்த குடும்பப் பிரச்சினை!

சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் லாலுவின் குடும்ப விஷயத்தை குறிப்பிட்டு பேசி முதல்வர் நிதிஷ் குமார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Samayam Tamil 22 Oct 2020, 10:20 am
பிஹார் மாநிலத்தில் வரும் 28ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. மக்கள் பிரச்சினைகளுக்கு கட்சிகள் எப்படி தீர்வு கண்டன? எங்கே தவறவிட்டன? என்று சுட்டிக் காட்டி எதிர்க்கட்சிகளை முன்னிறுத்தி பிரச்சாரத்தில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் தற்போது தனிப்பட்ட தாக்குதல்களாக பிரச்சாரக் கூட்டங்கள் மாறிவிட்டன. நேற்றைய தினம் பிஹார் மாநிலம் சரண் மாவட்டம் பர்சா சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் சந்திரிகா ராய்க்கு ஆதரவாக முதல்வர் நிதிஷ் குமார் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
Samayam Tamil Nitish Kumar


இவர் ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவின் மனைவி ஐஸ்வர்யா ராயின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் சந்திரிகா ராய், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் கலந்து கொண்டார். முதல்வர் நிதிஷ் குமார் வருகை புரிந்த போது, அவரது காலைத் தொட்டு ஐஸ்வர்யா ஆசி பெற்றார்.

பின்னர் பொதுமக்களிடையே பேசிய ஐஸ்வர்யா ராய், எனது தந்தைக்காக வாக்குகள் பெற இங்கே வந்துள்ளேன். நீங்கள் ஆதரவளித்தால் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராவார் என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து பேசிய நிதிஷ் குமார், தனது மனைவியுடன் மிக மோசமாக நடந்து கொண்டவர்கள் எப்படி இந்த மாநிலத்தை ஆள சரியானவர்களாக இருப்பார்கள்.

கமல் நாத்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

ஒரு படித்த பெண்ணிற்கு நேர்ந்த நிலையைப் பாருங்கள் மக்களே. இவருக்கு நேர்ந்தது வேறு யாருக்கும் நடக்கக் கூடாது. இவர் திருமண நிகழ்வில் நானும் கலந்து கொண்டேன். ஆனால் அதன்பிறகு நடந்தது மிகவும் வெட்கக்கேடானது என்று ஐஸ்வர்யா ராய் வாழ்வில் நடந்தவற்றை சுட்டிக் காட்டி பேசினார். பிஹார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் தரோகா பிரசாத் ராயின் பேத்தி ஐஸ்வர்யா ராய் ஆவார்.

இவர் லாலு பிரசாத்தின் மகன் தேஜ் பிரதாப் யாதவை கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த சூழலில் போதைப் பொருட்கள் உட்கொண்டு தன்னை அடித்து துன்புறுத்தியதாக தேஜ் பிரதாப் மீது ஐஸ்வர்யா பரபரப்பு குற்றம்சாட்டினார். இதன் தொடர்ச்சியாக விவாகரத்து கோரி பாட்னா நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது.

அடுத்த செய்தி