ஆப்நகரம்

பீர் பாட்டிலோடு போஸ் கொடுத்த பீகார் அரசியல்வாதி கைது..!!

மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ள பீகார் மாநிலத்தில் பீர் குடித்துவிட்டு முதல்வர் நிதிஷ் குமாரை திட்டிய செய்த முன்னாள் எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டுள்ளார்.

TNN 14 Jul 2016, 4:49 pm
மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ள பீகார் மாநிலத்தில் பீர் குடித்துவிட்டு முதல்வர் நிதிஷ் குமாரை திட்டிய செய்த முன்னாள் எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil bihar ex mla arrested for drinking beer mocking cm
பீர் பாட்டிலோடு போஸ் கொடுத்த பீகார் அரசியல்வாதி கைது..!!


நிதிஷ் குமார் முதல்வராக உள்ள பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் ஆளுங்கட்சியான ஐக்கிய ஜனதாதள கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏவான லாலன் ராம் என்பவர் மதுவிலக்கால் எந்த பயனும் இல்லை எனவும் நிதிஷ் குமார் சொல்லும் எல்லாவற்றையும் பின்பற்ற முடியாது எனவும் கையில் பீர் பாட்டிலோடு பேசும் காட்சிகள் அங்குள்ள உள்ளூர் செய்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.


இந்த வீடியோ காட்சிகளை ஆதாரமாக எடுத்துக் கொண்ட அவுரங்காபாத் காவல்துறையினர்,அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.பீகாரில் தடை செய்யப்பட்டுள்ள மது வகைகளை அருந்தியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இதனை தொடர்ந்து லாலன் ராம் ஐக்கிய ஜனதா தள கட்சியிலின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக அந்த கட்சி அறிவித்துள்ளது.


ஏற்கனவே ஐக்கிய ஜனதாதள கட்சியின் சட்டமன்ற மேலவை உறுப்பினரான மனோரமா தேவி,தனது வீட்டில் மதுபானங்களை வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.மதுவிலக்கை பீகாரில் அமல்படுத்தினாலும், தனது கட்சியினரிடையே அமல்படுத்த முடியாமல் நொந்து போயுள்ளார் நிதிஷ் குமார்.

அடுத்த செய்தி