ஆப்நகரம்

கோடிக்கணக்கான சொத்துக்களை 2 யானைக்கு உயில் எழுதிய பிலால்!

உயிரை காப்பாற்றிய யானைகள் தனது குடும்பம் எனக் கூறும் இமாம், தனது சொத்தில் பாதியை அவற்றுக்கு உயில் எழுதிக் கொடுத்துள்ளார்...

Samayam Tamil 11 Jun 2020, 9:05 am
பீகார் மாநிலத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழக்க வேண்டிய நபரை 2 யானைகள் காப்பாற்றியதையடுத்து, அந்த நபர் தனது கோடிக் கணக்கான சொத்துக்களைக் குறித்த யானைகளுக்கு உயில் எழுதி வைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil கோடிக்கணக்கான சொத்துக்களை 2 யானைக்கு உயில் எழுதிய பிலால்!
கோடிக்கணக்கான சொத்துக்களை 2 யானைக்கு உயில் எழுதிய பிலால்!


கேரளாவில் சமீபத்தில் கர்ப்பிணி யானை கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டில் யானைகள் மீது தனிக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் பீகார் மாநிலத்தில் தனிநபர் ஒருவர் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களை 2 யானைக்கு எழுதி வைத்த சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்தவர் அக்தர் இமாம். ஆசிய யானைகள் மறுவாழ்வு அமைப்பின் மேலாளர். இவர் 12 வயது முதல் யானைகளைப் பராமரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இமாம் சமீபத்தில் தனது சொத்தில் பாதியை இவர் வளர்த்து வரும் மோடி, ராணி என்ற யானைகளுக்கு எழுதி வைத்துள்ளார். இதற்கான காரணம் குறித்து இமாம் கூறுகையில், “சில காலம் முன் என்னைச் சிலர் துப்பாக்கியால் சுட வந்தனர். அது நள்ளிரவு. அப்போது நான் வளர்த்து வந்த இந்த 2 யானைகள் பிளிறியது. யானைகளின் சத்தத்தால், அந்த நபர் என்னைச் சுடாமல் ஓடிவிட்டார். நானும் எழுந்து கொண்டேன்” என்கிறார்.

சாலையில் ஒய்யாரமாக ஓய்வெடுத்த சிறுத்தை, அதிர்ச்சி வீடியோ!

இமாம் கடந்த 10 ஆண்டுகளாகத் தனது மனைவி, பிள்ளைகளைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இமாமுடன் இருப்பது இந்த 2 யானைகள்தான். இதனால் யானைகள்தான் தனது குடும்பம் எனக் கூறி தனக்குச் சொந்தமான நிலத்தை அவைகளுக்கு உயில் எழுதிக் கொடுத்துள்ளார்.

அதே வேளையில் யானைகளுக்குத் தனது சொத்தை எழுதிக் கொடுத்த காரணத்தால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக இமாம் அச்சம் தெரிவிக்கிறார். இமாம் மொத்த சொத்து மதிப்பு ரூ. 5 கோடி எனக் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி