ஆப்நகரம்

11,000 பாட்டில் பீரையும் குடித்து தீர்த்த எலிகள்; செம கடுப்பில் போலீசார்!

பாட்னா: ஆயிரக்கணக்கான பாட்டில்களில் இருந்த பீரை, எலிகள் குடித்து தீர்த்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

Samayam Tamil 3 Oct 2018, 5:43 pm
பீகார் மாநிலத்தில் கடந்த 2016ல் நிதிஷ் குமார் அரசு மதுவிலக்கைக் கொண்டு வந்தது. எனவே மது குடிப்போர், மது விற்பனை செய்வோர் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் வெளி மாநிலங்களில் இருந்து மது பாட்டில்கள் கடத்தல் சம்பவம் தொடர்ந்து வருகிறது.
Samayam Tamil Rats


இந்த பாட்டில்களைக் கைப்பற்றும் போலீசார், அவற்றை அழித்து விடுகின்றனர். இதேபோல் சமீபத்தில் சட்டவிரோத மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு கைமூர் மாவட்டத்தில் வைக்கப்பட்டு இருந்தன. அவை போலீஸ் கிடங்கில் பாதுகாப்பாக இருந்தன.

இதுகுறித்து தகவலறிந்த முதலமைச்சர் நிதிஷ் குமார், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மதுபாட்டில்களை அழிக்க உத்தரவிட்டார். அதன்படி, கிடங்கிற்கு போலீசார் சென்றனர். அங்கு மதுபாட்டில்கள் அனைத்தும் காலியாக இருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து தீவிர விசாரணைக்கு பின் விளக்கமளித்த மாவட்ட அதிகாரி கல்பனா குமார், கிடங்கில் சுமார் 11,000 பீர் பாட்டில்கள் வைக்கப்பட்டன. அதில் 16 லட்சம் லிட்டர் ஐஎம்எல் அதுவும், 9 லட்சம் லிட்டர் உள்நாட்டு மதுவும் இருந்தன.

தற்போது பீர் பாட்டில்களில் பீர் மாயமாகியுள்ளது. அனைத்திலும் சிறு துளை போடப்பட்டுள்ளது. எனவே எலிகள் குடித்திருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம் என்று தெரிவித்தார். கடந்த ஆண்டும் பீகாரில் மதுபாட்டில்களில் இருந்த மதுவை எலிகள் குடித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

Bihar Police blame rats for drinking seized liquor.

அடுத்த செய்தி