ஆப்நகரம்

Bihar: ஆகஸ்ட் 16 வரை மாநிலம் முழுக்க ஊரடங்கு நீட்டிப்பு... தமிழகத்தில்?

பல மாநிலங்களும் ஊரடங்கு தொடர்பாக ஆலோசனைகள் நடத்தி வருகின்றன. இந்நிலையில் அதிரடியாக அறிவித்துள்ளது பிகார் மாநில அரசு.

Samayam Tamil 29 Jul 2020, 3:12 pm
பிகாரில் ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிப்கார் மாநில அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil Lockdown


நாடு முழுக்க கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். அதே போல பல மாநிலங்களும் ஊரடங்கு தொடர்பாக ஆலோசனைகள் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், பிகார் மாநிலம் ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.


ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் அதிரடி உத்தரவு!

ஏற்கனவே ஆகஸ்ட் 31 வரை மேற்கு வங்கம் ஊரடங்கை நீட்டித்து அறிவித்துள்ள நிலையில்,தற்போது பிகாரும் இந்த முடிவை அறிவித்துள்ளது. இதனையடுத்து தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்வியும் அதிகரித்துள்ளது.

அடுத்த செய்தி