ஆப்நகரம்

பீகார் மாநிலத்தில் அமைச்சரவை விரிவாக்கம்

பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் தனது அமைச்சரவையில் 8 புதிய அமைச்சர்களை இணைத்து விரிவாக்கம் செய்துள்ளார். இந்த 8 பேரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவர்கள். இதில் கூட்டணி கட்சியான பா.ஜ.கவுக்கு ஒரு இடம் கூட ஒதுக்கப்படவில்லை.

Samayam Tamil 2 Jun 2019, 7:21 pm
பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் தனது அமைச்சரவையில் 8 புதிய அமைச்சர்களை இணைத்து விரிவாக்கம் செய்துள்ளார்.
Samayam Tamil nithish kumar


இந்த 8 பேரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவர்கள். இதில் கூட்டணி கட்சியான பா.ஜ.கவுக்கு ஒரு இடம் கூட ஒதுக்கப்படவில்லை. இந்நிலையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள அமைச்சரவையில் இடம் ஒதுக்குவதாக தெரிவித்தும், பா.ஜ.க மூத்த தலைவர்கள் அதனை மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ள நிதீஷ் குமார், பா.ஜ.க மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இடையேயான கூட்டணி தொடரும் என்றும் கூறியுள்ளார்.

முன்னதாக பெயருக்கென்று மத்திய அமைச்சரவையில் ஒரு இடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்தியில் ஆளும் பாஜக மீது அதிருப்தி தெரிவித்த நிதீஷ் குமார், இனி எதிர்காலத்தில் பா.ஜ.கவின் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்க போவதில்லை என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கு ஒரு இடம் வழங்க பா.ஜனதா முடிவு செய்து இருந்தது. அதன்படி சிவசேனா, லோக் ஜன சக்தி, அபனா தளம் ஆகிய கட்சிகளுக்கு மந்திரி பதவி கிடைத்தன. ஆனால், ஐக்கிய ஜனதா தளம் 2 மந்திரி பதவி கேட்டது. ஒரு மந்திரி பதவி மட்டுமே வழங்குவதாக தெரிவித்ததால் அந்த கட்சி மந்திரி சபையில் இடம் பெறவில்லை.

இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் அமைச்சரவையில், நாங்கள் ஒரு போதும் சேர மாட்டோம். எதிர்காலத்திலும் இதே நிலைதான். ஆனால் பா.ஜனதா கூட்டணியில் தொடர்ந்து நீடிப்போம், என்றார். பாட்னா வந்தவுடன் தனது அமைச்சரவையில் மேலும் 8 பேரை சேர்த்து விரிவாக்கினார்.

அடுத்த செய்தி