ஆப்நகரம்

ஹலோ நேபாளா சார்? சரக்கு கிடைக்குமா??

திரைகடல் ஓடி திரவியம் தேடு என்பார்கள். ஆனால், திரைகடல் ஓடி "சரக்கு" தேடிய பிகார் வாசிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Hindustan Times 24 May 2016, 4:15 pm
பாட்னா: திரைகடல் ஓடி திரவியம் தேடு என்பார்கள். ஆனால், திரைகடல் ஓடி "சரக்கு" தேடிய பிகார் வாசிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Samayam Tamil biharis get arrest in nepal for going there to consume alcohol
ஹலோ நேபாளா சார்? சரக்கு கிடைக்குமா??


பிகார் மாநிலத்தில் கடந்த மாதம் 5-ம் தேதி முதல் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. எனவே, அம்மாநிலம் முழுவதும் பரவலாக மது கிடைப்பதில்லை. கள்ளச் சந்தையில் மது விற்பனை நடைபெறுகிறது என கூறப்படுகிறது. ஆனால், அது வேறு கதை.

இந்நிலையில், பிகார் மாநிலத்தில் மது கிடைக்காத விரக்தியில், அம்மாநில மதுப்பிரியர்கள் எல்லை தாண்டி அண்டை நாட்டுக்கும் செல்ல துணிந்து விட்டனர்.

அதன்படி, பிகார் மாநிலம் சிதாமாரி மாவட்ட எல்லையோரம் அமைந்துள்ள அண்டை நாடான நேபாளத்திற்குள் நுழைந்து பிகார் மாநில "குடி" மகன்கள், 70 பேர் மது அருந்தியுள்ளனர். அத்தோடு கும்மாளமும் போட்டுள்ளதாக தெரிகிறது.

தகவலறிந்து அங்கு வந்த போலீசார், அவர்களை கைது செய்துள்ளனர். மேலும், "குடி" மகன்களுக்கு அபராதம் விதித்துள்ள அந்நாட்டு போலீசார், நேபாளத்துக்குள் நுழைய மாட்டோம் என்ற வாக்குறுதியையும் அவர்களிடம் எழுதி வாங்கிய பின்னர் தான் அவர்களை அனுப்பி வைத்தார்களாம்.

அடுத்த செய்தி