ஆப்நகரம்

புதிய சட்ட திருத்த மசோதா: முடிவுக்கு வரும் ஆங்கிலோ இந்தியன் எம்.பி.க்கள் கோட்டா!

எஸ்.சி., எஸ்.டி மற்றும் ஆங்கிலோ-இந்தியன் சமூகங்களுக்கு இடஒதுக்கீடானது அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தபோது, 70 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டது

Samayam Tamil 9 Dec 2019, 5:58 pm
டெல்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்ட திருத்த மசோதாவின் படி நாடாளுமன்றத்தில் இரண்டு ஆங்கிலோ இந்தியன் எம்.பி.க்களின் நியமனம் முடிவுக்கு வரவுள்ளது.
Samayam Tamil நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்


இந்திய அரசியல் அமைப்பு சட்டம் நாடாளுமன்ற மக்களவைக்கு மொத்தம் 552 உறுப்பினர்களை வழங்கியுள்ளது. தற்போதைய எண்ணிக்கையின் படி மக்களவையில் 545 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 543 உறுப்பினர்கள் தேர்தல் மூலமாகவும், இரண்டு ஆங்கிலோ இந்தியன் உறுப்பினர்கள் குடியரசுத் தலைவராலும் நியமிக்கப்படுகின்றனர்.

அதேபோன்று 131 இடங்கள் எஸ்.சி. (84), எஸ்.டி. (47) பிரதிநிதிகளுக்கு மக்களவையில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல் மாநில சட்டப்பேரவைகளிலும் இச்சமூகத்தினருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாநில சட்டப்பேரவைகளில் 614 எஸ்.சி., பிரதிநிதிகளும், 554 எஸ்.டி. பிரதிநிதிகளும் உள்ளனர்.

மிகப்பெரிய தவறை செய்யப்போகும் பாஜக: எச்சரிக்கும் ப.சிதம்பரம்!

அரசியலமைப்பு (126ஆவது) திருத்த மசோதாவின் படி, மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் எஸ்.சி., எஸ்.டி மற்றும் ஆங்கிலோ-இந்தியன் சமூகங்களுக்கு இடஒதுக்கீடானது அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தபோது, 70 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டது. அதன்படி, வருகிற 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில், நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் எஸ்.சி., எஸ்.டி சமூக பிரதிநிகளுக்கான இடஒதுக்கீட்டை அடுத்த 10 ஆண்டுகளுக்கு அதாவது 2030ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், ஆங்கிலோ-இந்தியன் சமூக பிரதிநிதிகளுக்கான இட ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை.

மினரல் வாட்டர் 15ரூ, ஐஸ்கிரீம் 20ரூ... விலைஉயர்வு பத்தி ஏன் சத்தம் போடறீங்க... 2012இல் நிதியமைச்சர் பேச்சு... இதுக்கு என்ன சொல்வீங்க

இது தொடர்பான சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதனால், 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இரண்டு ஆங்கிலோ இந்தியன் எம்.பி.க்களின் நியமனம் முடிவுக்கு வரவுள்ளது.

அடுத்த செய்தி