ஆப்நகரம்

மேடையில் 45 புஷ்-அப் செய்து அசத்திய திரிபுரா முதல்வர்

திரிபுரா முதல்வர் பிப்லப் டெப் தான் தினமும் உடற்பயிற்சிகள் செய்துவருவதாகவும் 10 முதல் 15 நிமிடங்களில் 150 புஷ்-அப் செய்துகாட்ட முடியும் என்று குறிப்பிட்டார்.

Samayam Tamil 6 Oct 2018, 11:47 pm
திரிபுரா முதல்வர் பிப்லப் டெப் பொதுமேடையில் புஷ்-அப் சவாலில் வெற்றி பெற்று கலக்கியிருக்கிறார்.
Samayam Tamil img_1538824106457_163


பாஜகவைச் சேர்ந்த திரிபுரா மாநில முதல்வர் பிப்லப் டெப் சனிக்கிழமை நடைபெற்ற விவாத கருத்தரங்கம் ஒன்றில் கலந்துகொண்டார்.

அப்போது, பேசிய அவர் தான் தினமும் உடற்பயிற்சிகள் செய்துவருவதாகவும் 10 முதல் 15 நிமிடங்களில் 150 புஷ்-அப் செய்துகாட்ட முடியும் என்று குறிப்பிட்டார். உடனே, அந்த கருத்தரங்களின் ஒருங்கிணைப்பாளர் பிப்லப் 45 புஷ்-அப் இப்போதே செய்து காட்ட முடியுமா என சவால் விட்டார்.

இதனை ஏற்ற பிப்லப் மேடையிலேயே இடைவெளி இல்லாமல் 45 புஷ்-அப் செய்து சவாலில் வெற்றி பெற்று அசத்தினார். இதே நிகழ்ச்சியில் பாஜக எம்.பி., பாபுல்சுப்ரியோவும் கலந்துகொண்டார். அவருக்கும் இதே சவால் விடுக்கப்பட்டபோது அவர் அதனை ஏற்க மறுத்துவிட்டார்.

அடுத்த செய்தி