ஆப்நகரம்

தலைநகருக்குள் நுழைந்த பறவைக் காய்ச்சல்; அடுத்தடுத்து நிகழ்ந்த பரபரப்பு!

காகங்கள், வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 11 Jan 2021, 1:13 pm
இந்தியாவில் உத்தரப் பிரதேசம், கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக ஹரியானா மாநிலத்தில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்துள்ளன. இதற்கிடையில் ஜம்மு காஷ்மீர் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் மகாராஷ்டிராவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த பட்டியலில் 9வது மாநிலமாக டெல்லி இணைந்துள்ளது.
Samayam Tamil Bird Flu in Delhi


டெல்லியின் சஞ்சய் லேக்கில் 17 வாத்துக்கள் திடீரென உயிரிழந்துள்ளன. உடனே அந்தப் பகுதியை மூடி உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதி எச்சரிக்கையூட்டும் பகுதியாக அறிவிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹவுஸ் காஸ் பார்க், துவாரகா செக்டார் 9 பார்க், ஹஸ்ட்சல் பார்க் ஆகிய பகுதிகளும் மூடப்பட்டுள்ளன.

பள்ளிகள் திறப்பு: மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி!
கடந்த சில நாட்களில் டெல்லி மேம்பாட்டு ஆணையத்திற்கு உட்பட்ட 14 இடங்களில் 91 காகங்கள் உயிரிழந்துள்ளன. தெற்கு டெல்லியின் ஜசோலா பகுதியில் 24 காகங்கள் உயிரிழந்துள்ளன. இவற்றின் 8 மாதிரிகள் போபாலில் உள்ள ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

அதில் மயூர் விஹார் பேஸ் 3ல் இருந்து நான்கும், சஞ்சய் லேக்கில் இருந்து மூன்றும், துவாரகாவில் இருந்தும் ஒன்றும் அடங்கும். இதேபோல் சில மாதிரிகள் ஜலந்தரில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சோதனையில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.

இதுலயும் லேட்டா, முன்னாடியே சொல்ல வேண்டியது தானே?: ரஜினி ரசிகர்கள்
இந்த சூழலில் விலங்குகளில் நோய்த்தொற்றை தடுப்பதற்கு இந்தியாவில் என்னென்ன தடுப்பு மருந்துகள் இருக்கின்றன என்று உடனே அறிக்கை சமர்பிக்குமாறு விலங்குகள் நலத்துறை அமைச்சகத்திற்கு நாடாளுமன்ற விவசாய நிலைக்குழு உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதுதொடர்பாக இன்று பிற்பகல் அவசரக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி