ஆப்நகரம்

பாலியல் புகாரில் சிக்கிய பிஷப் பிராங்கோ முல்லக்கல் பதவி விலகல்!

பிஷல் பிராங்கோ முல்லக்கல் பாலியல் புகார் காரணமாக, தனது பதவியை விட்டு விலகினார்.

Samayam Tamil 15 Sep 2018, 1:47 pm
ஜலந்தர்: பிஷல் பிராங்கோ முல்லக்கல் பாலியல் புகார் காரணமாக, தனது பதவியை விட்டு விலகினார்.
Samayam Tamil Bishop


கேரள மாநிலம் கோட்டயம் அருட்கன்னியர் இல்லத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரியை, பிஷப் பிராங்கோ மூலக்கல் பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இவர் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறைமாவட்ட பிஷப் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014 முதல் 2016 வரை பலமுறை பலாத்காரம் செய்து வந்ததாக குற்றம்சாட்டப்படது. இதுகுறித்து வைக்கம் போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரித்து வருகிறது.

ஆனால் போலீசார் வழக்கை திசை திருப்புவதாக கொச்சி கத்தோலிக்க சீர்திருத்த அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிராங்கோ மூலக்கல்லை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதற்கிடையில் வரும் 19ஆம் தேதி ஆஜராகுமாறு, பிஷப் பிராங்கோ மூலக்கல்லுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். இதுதொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, வரும் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. எனவே கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், பிராங்கோ மூலக்கல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Bishop Franco readies for grilling, hands over charge.

அடுத்த செய்தி