ஆப்நகரம்

வெறுப்புணா்வை தூண்டும் பேச்சு – பா.ஜ.க. முதல் இடம்

நாட்டில் வெறுப்புணா்வை தூண்டும் பேச்சுகள் மீதான வழக்குகளிலும் பாரதிய ஜனதா கட்சி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் முதல் இடம் வகிப்பதாக புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன.

Samayam Tamil 26 Apr 2018, 1:21 am
நாட்டில் வெறுப்புணா்வை தூண்டும் பேச்சுகள் மீதான வழக்குகளிலும் பாரதிய ஜனதா கட்சி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் முதல் இடம் வகிப்பதாக புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன.
Samayam Tamil Bjp


ஜனநாயக சீத்திருத்தத்திற்கான சங்கம் மேற்கொண்ட ஆய்வில் 15 எம்.பி.க்கள் மற்றும் 43 சட்டமன்ற உறுப்பினா்கள் என பதவியில் உள்ள 58 போ் வெறுப்பு பேச்சு வழக்குகளில் சிக்கி உள்ளதாக தொிய வந்துள்ளது. சமூகத்தில் வெறுப்பை ஏற்படுத்தக் கூடிய வகையிலான கருத்துகளை வெளியிட்டு வரும் அரசியல்வாதிகள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினா்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்த வழக்குகளில் பா.ஜ.க. முதல் இடம் வகிக்கிறது. அந்த கட்சியைச் சோ்ந்த 10 எம்.பி.க்கள் உள்பட 27 போ் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதனை தவிா்த்து அனைத்து இந்திய மஜ்லிஸ் கட்சி மற்றும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சிகள் தலா 6, தெலுங்கு தேசம், சிவசேனா தலா 3, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளத்தைச் சோ்ந்த தலா 2 பேரும் இந்த வழக்குகளில் சிக்கி உள்ளனா். அமைச்சர்களைப் பொறுத்தவரை மத்திய குடிநீா் மற்றும் கழிவுநீா் அகற்றல் அமைச்சா் உமாபாரதி மற்றும் 8 மாநில அமைச்சா்கள் மீது இந்த வழக்கு பதியப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி