ஆப்நகரம்

பாஜக தொண்டர் படுகொலை சம்பவம் எதிரொலி: கேரளாவில் இன்று முழு அடைப்பு

பாஜக தொண்டர் படுகொலை சம்பவத்தை அடுத்து, கேரளாவில் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

TNN 13 Oct 2016, 12:07 am
திருவனந்தபுரம்: பாஜக தொண்டர் படுகொலை சம்பவத்தை அடுத்து, கேரளாவில் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil bjp calls for statewide strike after party workers murder in kannur
பாஜக தொண்டர் படுகொலை சம்பவம் எதிரொலி: கேரளாவில் இன்று முழு அடைப்பு


கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் ரெமித்(32) என்ற பாஜக தொண்டர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது அரசியல் பழிவாங்குதல் நடவடிக்கை என்று குற்றம்சாட்டியுள்ளார். இந்த கொலையை கண்டித்து, இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு கேரள மாநில பாஜக அழைப்பு விடுத்துள்ளது.

இந்த போராட்டம் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கன்னூர் தொகுதி முதலமைச்சர் பினராயி விஜயனுடைய தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படுகொலை சம்பவத்திற்கு பழிவாங்குவதற்காக பா.ஜ.க தொண்டர் கொலை செய்யப்பட்டதாக கேரள பா.ஜ.க., தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, கன்னூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர் ஒருவர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

BJP calls for statewide strike after party worker's murder in Kannur.

அடுத்த செய்தி