ஆப்நகரம்

ஜாதி அரசியல் செய்யும் பாஜக: உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகள் பற்றி மார்க்கண்டேய கட்ஜூ கருத்து

உத்தரப்பிரதேச மாநிலத்தில், ஜாதி ஓட்டுகளை ஈர்த்ததன் மூலமாக, பாஜக வெற்றிபெற்றுள்ளதாக, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கருத்து தெரிவித்துள்ளார்.

TNN 11 Mar 2017, 4:03 pm
உத்தரப்பிரதேச மாநிலத்தில், ஜாதி ஓட்டுகளை ஈர்த்ததன் மூலமாக, பாஜக வெற்றிபெற்றுள்ளதாக, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கருத்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil bjp gearing up for caste politics up poll result is the best example markandey katju
ஜாதி அரசியல் செய்யும் பாஜக: உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகள் பற்றி மார்க்கண்டேய கட்ஜூ கருத்து


பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று வெளியிடப்பட்ட உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில், பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ளது.

இதையடுத்து, அக்கட்சி ஆட்சியமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், பாஜக.,வின் தேர்தல் வெற்றி குறித்து, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது:

உத்தரப்பிரதேச தேர்தலில், காங்கிரஸ், சமாஜ்வாடி கூட்டணி வெல்லும் எனக் கூறியிருந்தேன். எனது கணிப்பில் தவறு நிகழ்ந்துள்ளதை ஏற்றுக் கொள்கிறேன். உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய 2 மாநிலங்களும் இந்தியாவிலேயே அதிகளவில் ஜாதியை பிரதானமாகப் பார்க்கும் மாநிலங்களாகும்.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள யாதவர் சமூகத்தினரை தவிர, இதர அனைத்து பிற்படுத்தப்பட்ட ஜாதியினரையும் பாஜக., தனது பக்கம் நேர்த்தியாக, திட்டமிட்டு ஈர்த்துள்ளது. அவர்களின் ஓட்டுகளே, பாஜக.,வின் இந்த பிரமாண்ட வெற்றிக்கு முதன்மை காரணமாகும்.

அதேபோன்று, யாதவர் சமுதாயத்தினரை வேட்பாளர்களாக நிறுத்தாமல், மற்ற சமூகத்தினரையே பெரும்பாலான இடங்களில் பாஜக நிறுத்தியது. இந்த வியூகம் எதிர்பார்த்த வெற்றியை அந்த கட்சிக்கு பெற்று தந்துள்ளது. மேலும், ஜாதி அரசியல் செய்வதில் பாஜக தனது உண்மை முகத்தை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது.

இவ்வாறு மார்க்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார்.

BJP gearing up for caste politics; UP poll result is the best example: Markandey Katju

அடுத்த செய்தி