ஆப்நகரம்

திட்டமிட்ட பொய்களை பரப்பும் பாஜக: ராகுல் காந்தி சாடல்

மத்தியில் ஆளும் பாஜக அரசு திட்டமிட்டு மூன்று விஷயங்களில் பொய்களை பரப்புகிறது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்

Samayam Tamil 19 Jul 2020, 10:02 pm
கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,38,716 லிருந்து 10,77,618 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26,273லிருந்து 26,816 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேசமயம், ஏற்கனவே பாதிப்புக்கு உள்ளாகியிருந்த பொருளாதாரம் கொரோனாவால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
Samayam Tamil ராகுல் காந்தி
ராகுல் காந்தி


இதனிடையே, எல்லை பகுதியான கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து படைகளை திரும்ப அழைத்துக் கொள்ளும் நடவடிக்கையின் போது, இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். இந்த விவகாரமும் பெரிய அளவில் பேசுபொருளாகி உள்ளது.

இந்த நிலையில், பாஜக அரசு திட்டமிட்டு 3 பொய்களை அதிகாரப்பூர்வமாக மாற்றியுள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா பரிசோதனைகள் மற்றும் இறப்பு விபரங்கள், புதிய கணக்கீடு முறைகள் மூலம் உள்நாட்டு உற்பத்தியை கணக்கிடுவது, சீன ஆக்கிரமிப்பு விவகாரத்தில் ஊடகங்களை அச்சுறுத்துவது ஆகிய 3 விஷயங்களில் பாஜக அரசு பொய்களையே அதிகாரப்பூர்வ செய்தியாக்கி உள்ளது என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். பாஜகவின் மாயை அரசியல் விரைவில் நொறுங்கும் என்றும் இதற்கான விலையை இந்தியா கொடுக்கும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கொரொனாவுடன் போராட இத குடிங்க!


முன்னதாக, சீன விவகாரத்தில் கருத்து தெரிவித்த ராகுல், அரசின் கோழைத்தனமான நடவடிக்கைகளால் இந்தியா பெரும் விலை கொடுக்க நேரிடும் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. அத்துடன், வரும் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20 லட்சத்தை தாண்டிவிடும் என எச்சரிக்கை விடுத்துள்ள ராகுல், தான் ஏற்கனவே கூறியது போல் 10 லட்சத்தை தாண்டி விட்டது எனவும், முறையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி