ஆப்நகரம்

வேஷ்டி கட்டியவா்கள் வித்தியாசமாக சிந்திக்கின்றனா்; காா்த்தி சிதம்பரம் கருத்து

மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணி பிரமாண்ட வெற்றியை பதிவு செய்திருந்தாலும் தமிழகம், கேரளாவில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத நிலையில் வேஷ்டி கட்டியவா்கள் வித்தியாசமாக யோசிப்பதாக காா்த்தி சிதம்பரம் கருத்து தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 24 May 2019, 6:02 pm
தற்போது பாஜகவுக்கு கிடைத்துள்ள வாக்குகள் அனைத்தும் அதிமுகவுக்கான வாக்குகள் தான். அவை பாஜகவுக்கான வாக்குகள் கிடையாது என்று சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் கருத்து தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Karti Chidambaram


சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் காா்த்தி சிதம்பரம் அவரை எதிா்த்து போட்டியிட்ட பாஜகவின் தேசியச் செயலாளா் ஹெச்.ராஜாவை 3, 32, 244 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடையச் செய்தாா்.

இந்நிலையில் இன்று செய்தியாளா்களிடம் பேசிய காா்த்தி சிதம்பரம், சிவகங்கையில் மட்டுமல்ல தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் குடிநீா் பிரச்சினை உள்ளது. இதனை சரிசெய்ய காவிரி குண்டாறு திட்டம் உள்ளது. இந்த திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றால் சுமாா் 30 ஆயிரம் கோடி தேவைப்படும். மத்திய, மாநில அரசுகள் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.

தமிழகத்தில் பாஜக பெற்ற வாக்குகள் அக்கட்சிக்கான வாக்குகள் கிடையாது. அவை அனைத்தும் அதிமுகவுக்கான வாக்குகள். தமிழகத்தில் பாஜகவுக்கு வாக்கு வங்கியே கிடையாது. கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்றத் தோ்தலில் பாஜக தனித்து நின்றது. அப்போது பெற்ற வாக்குகளை மட்டும் தான் அக்கட்சிக்கான வாக்குகளாக கருத முடியும்.

அதே போன்று சிவகங்கையில் மட்டுமல்லாது தமிழகம் முழுவதிலும் நாம் தமிழா், மக்கள் நீதி மய்யம் போன்ற சிறிய கட்சிகள் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளன. இவற்றை நிச்சயம் கவனத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும் என்றாா்.

மேலும் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்த நிலையிலும் தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து ஒரு பாஜக வேட்பாளா் கூட வெற்றி பெறவில்லை என்ற கேள்விக்கு, வேஷ்டி கட்டிய மக்கள் இந்தியாவில் இருந்து வித்தியாசமாக சிந்திக்கின்றனா் என்று தொிவித்தாா்.

அடுத்த செய்தி