ஆப்நகரம்

மாநிலங்களவையில் முக்கிய விவாதம்; பாஜக எம்.பிக்களுக்கு கொறடா அழைப்பு!

வரும் 14ஆம் தேதி பாஜக மாநிலங்களவை எம்.பிக்கள் அனைவரும் அவைக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 9 Sep 2020, 2:28 pm
வரும் செப்டம்பர் 14ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. இதையடுத்து அக்டோபர் ஒன்றாம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இரு அவைகளும் நாள்தோறும் நான்கு மணி நேரம் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மக்களவை காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், மாநிலங்களவை பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையும் நடைபெறுகிறது. இந்நிலையில் மாநிலங்களவையின் பாஜக தலைமை கொறடா ஷிவ் பிரதாப் சுக்லா அக்கட்சியின் அனைத்து மாநிலங்களவை எம்.பிக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
Samayam Tamil BJP MPs


அதில், மாநிலங்களவையில் வரும் 14ஆம் தேதி முக்கிய விவாதம் நடைபெறவுள்ளது. இதுதொடர்பான உரிய முடிவெடுக்க வேண்டியுள்ளது. எனவே பாஜகவின் அனைத்து மாநிலங்களவை எம்.பிக்களும் தவறாமல் அவையில் பங்கேற்க வேண்டும்.

அரசின் நிலைப்பாட்டிற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலங்களவையில் வரும் 14ஆம் தேதி பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சஞ்சய் ராவத்தை தூக்கிவிட்ட சிவசேனா - விடாமல் எரியும் கங்கணா விவகாரம்!

அன்றைய தினம் மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 11ஆம் தேதி நண்பகல் 12 மணியுடன் நிறைவு பெறுகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஒருங்கிணைந்த ஜனதா தளக் கட்சியின் ஹரிவன்ஷ் களமிறங்குகிறார். இதற்காக கூட்டணி கட்சிகளிடம் பாஜக ஆதரவு கோரி வருகிறது. ஹரிவன்ஷை ஒருமனதாக தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி