மொத்தம் 243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி அங்கு கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. காங்கிரஸ், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்து ஒரு அணியிலும், பாஜக, முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து மற்றொரு அணியகவும் களம் காணவுள்ளன.
ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதன்படி, ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி 144 தொகுதிகளிலும், காங்கிரஸ் 70, இந்திய கம்யூனிஸ் (எம்.எல்) 19, இந்திய கம்யூனிஸ்ட் 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 4 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. அக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக இடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதன்படி, 50-50 என்ற விகிதத்தில் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 122 தொகுதிகளும், பாஜகவுக்கு 121 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தல்: இவர்தான் முதல்வர் வேட்பாளர்!
ஜித்தன் ராம் மாஞ்சியின் இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா கட்சிக்கு, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் தொகுதிகளை ஒதுக்க வேண்டும். ஒருவேளை லோக் ஜனசக்தி கட்சியானது இந்த கூட்டணியில் இருந்தால் அவர்களுக்கான தொகுதிகளை பாஜக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் இருந்து ஒதுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே 143 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்து விட்டதாக கூறப்படும் லோக் ஜனசக்தி கட்சி, ராம்விலாஸ் பஸ்வானின் மகனான சிராஜ் பஸ்வானை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என கூறி வருவதால் அக்கட்சி கூட்டணியில் இடம்பெறுமா என்பது கேள்வியாகவே உள்ளது.
ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதன்படி, ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி 144 தொகுதிகளிலும், காங்கிரஸ் 70, இந்திய கம்யூனிஸ் (எம்.எல்) 19, இந்திய கம்யூனிஸ்ட் 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 4 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. அக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக இடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதன்படி, 50-50 என்ற விகிதத்தில் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 122 தொகுதிகளும், பாஜகவுக்கு 121 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தல்: இவர்தான் முதல்வர் வேட்பாளர்!
ஜித்தன் ராம் மாஞ்சியின் இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா கட்சிக்கு, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் தொகுதிகளை ஒதுக்க வேண்டும். ஒருவேளை லோக் ஜனசக்தி கட்சியானது இந்த கூட்டணியில் இருந்தால் அவர்களுக்கான தொகுதிகளை பாஜக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் இருந்து ஒதுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே 143 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்து விட்டதாக கூறப்படும் லோக் ஜனசக்தி கட்சி, ராம்விலாஸ் பஸ்வானின் மகனான சிராஜ் பஸ்வானை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என கூறி வருவதால் அக்கட்சி கூட்டணியில் இடம்பெறுமா என்பது கேள்வியாகவே உள்ளது.