ஆப்நகரம்

ஓங்கி அறைந்தால் ரூ.1 கோடி பரிசு; அதுவும் லாலு மகனை; சர்ச்சையை கிளப்பிய பாஜக தலைவர்!

லாலு மகன் தேஜ் பிரதாப் யாதவை அறைந்தால், ரூ.1 கோடி தருவதாக பாஜக தலைவர் பரபரப்பு கிளப்பியுள்ளார்.

TNN 25 Nov 2017, 6:10 am
பாட்னா: லாலு மகன் தேஜ் பிரதாப் யாதவை அறைந்தால், ரூ.1 கோடி தருவதாக பாஜக தலைவர் பரபரப்பு கிளப்பியுள்ளார்.
Samayam Tamil bjp leader promises rs 1 crore to whoever slaps lalu yadavs son
ஓங்கி அறைந்தால் ரூ.1 கோடி பரிசு; அதுவும் லாலு மகனை; சர்ச்சையை கிளப்பிய பாஜக தலைவர்!


பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி உடைந்தது. இதையடுத்து ஐக்கிய ஜனதா தளம், பாஜகவுடன் சேர்ந்து ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

ஆதரவளித்த பாஜகவிற்கு பிரதிபலனாக சுஷில்குமார் மோடிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து லாலு, நிதிஷ் கட்சியினர் இடையே சர்ச்சைக்குரிய கருத்துக்கள் மாறி, மாறி தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில், துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடியின் வீடு புகுந்து தாக்குவோம் என்று லாலு மகன் தேஜ் பிரதாப் யாதவ் பேசிய வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து பாட்னா மாவட்ட பாஜக ஊடக தொடர்பாளர் அனில் சானி, தேஜ் பிரதாப் கன்னத்தில் யாராவது அறைந்தால், அவருக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

தேஜ் பிரதாப்பை கண்டித்து போராட்டங்கள் நடைபெறும் என்றார். இதுகுறித்து தகவலறிந்த மாநில பாஜக தலைமை, அனில் சானி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

BJP Leader Promises Rs. 1 Crore To Whoever Slaps Lalu Yadav's Son.

அடுத்த செய்தி