ஆப்நகரம்

லாலு மகன் கன்னத்தில் அறைந்தால் ரூ.1 கோடி பரிசு.!

முன்னாள் மத்திய அமைச்சர், லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரசாத் கன்னத்தில் அறைந்தால் ரூ.1 கோடி பரிசு தரப்படும் என பா.ஜ.க தலைவர் அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

TNN 25 Nov 2017, 10:28 am
முன்னாள் மத்திய அமைச்சர், லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரசாத் கன்னத்தில் அறைந்தால் ரூ.1 கோடி பரிசு தரப்படும் என பா.ஜ.க தலைவர் அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil bjp leader promises rs 1 crore to whoever slaps lalu yadavs son
லாலு மகன் கன்னத்தில் அறைந்தால் ரூ.1 கோடி பரிசு.!


பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடியின் வீடு புகுந்து தாக்குவோம் என ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் வீடியோ மூலமாக மிரட்டல் விடுத்திருந்தார்.

இந்நிலையில், பாட்னா மாவட்ட பா.ஜ.க ஊடக தொடர்பாளர் அனில் சானி என்பவர், தேஜ் பிரதாப் யாதவ் கன்னத்தில் அறையும் நபருக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் அவரது வீட்டு முன்பு போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்தார்.

பா.ஜ.க தலைவரின் இந்த கருத்து, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விசாரணைக்குபின் அனில் சானி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பாரதிய ஜனதாவின் மாநில அமைப்பு தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி