ஆப்நகரம்

அவரு தான்பா சூப்பரு, இப்பவும் இருக்காரே; செம கடுப்பில் சுப்பிரமணியன் சுவாமி!

பாஜகவின் தேசிய அளவிலான நிர்வாகிகள் பட்டியல் சமீபத்தில் வெளியான நிலையில் சுப்பிரமணியன் சுவாமி பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 30 Sep 2020, 8:19 am
நாட்டின் ஏதாவது விஷயத்தைக் கையிலெடுத்துக் கொண்டு அதை ஊதி பெரிதாக்கிக் கொண்டிருப்பவர் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. குறிப்பாக அரசியல் கட்சிகளில் பாரபட்சம் காட்டுவதில்லை. தனது கட்சி தலைவர்களையே விளாசி தள்ளுவார். இப்படி சர்ச்சைகளின் நாயகனாக இருக்கும் சுப்பிரமணியன் சுவாமி, இன்று காலை போட்ட ட்விட் ஒன்று பாஜகவிற்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கடந்த 2014ஆம் ஆண்டு அப்போதைய பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் குழு ஒன்றை அமைத்திருந்தார்.
Samayam Tamil subramanian swamy


அந்த ஆண்டு நடைபெறவிருந்த மக்களவை தேர்தலை ஒட்டி கட்சிப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் ”போர்த்திறன் வாய்ந்த செயல்பாட்டு குழு” என்ற பெயரில் குழு அமைக்கப்பட்டது. அதற்கு தலைவராக சுப்பிரமணியன் சுவாமி நியமிக்கப்பட்டிருந்தார்.

இதுதொடர்பான அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்டுள்ளார். அதன்கீழ், ராஜ்நாத் சிங் தலைவராக இருந்த போது கட்சியின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தன. ஏனெனில் அவர் மோடியின் பேச்சைக் கேட்டு செயல்பட்டார்.

சோனியா காந்தி படிப்பு சர்ச்சை: சபாநாயகருக்கு சுப்ரமணியன் சுவாமி கடிதம்!

இதை நிதின் கட்கரியே என்னிடம் கூறியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் தற்போது தேசிய தலைவராக இருக்கும் ஜே.பி.நட்டாவின் செயல்பாடுகளை மறைமுகமாக விமர்சித்திருப்பது தெரிகிறது. இவர் அமித் ஷாவின் பேச்சைக் கேட்டு செயல்படுவது போன்றும் கருத்தை பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் பாஜகவின் தேசிய அளவிலான நிர்வாகிகள் பட்டியல் வெளியானது. அதில் சுப்பிரமணியன் சுவாமியின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் ஏற்பட்ட அதிருப்தியால் தான் சுவாமி இப்படி கொந்தளித்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இவர் மட்டுமல்ல தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் பாஜகவின் தேசிய நிர்வாகிகள் பட்டியலில் இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சுப்பிரமணியன் சுவாமியை ஓரங்கட்ட கட்சி மேலிடம் முடிவு செய்திருப்பதையே இத்தகைய நடவடிக்கைகள் காட்டுவதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி