ஆப்நகரம்

இதை ஏற்கவே முடியாது- பாஜக எம்.எல்.ஏவை கடுமையாக கண்டித்த பிரதமர் மோடி!

இந்தூர் பாஜக எம்.எல்.ஏ ஆகாஷ் விஜய்வர்கியாவின் செயலை ஒருபோதும் ஏற்க முடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 2 Jul 2019, 4:02 pm
பாஜகவின் தேசிய பொதுச் செயலாளராக இருப்பவர் கைலாஷ் விஜய்வர்கியா. இவரது மகன் ஆகாஷ் விஜய்வர்கியா. கடந்த சில நாட்களுக்கு முன்பு, மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுத்தனர்.
Samayam Tamil Modi.


அப்போது அங்கு சென்ற ஆகாஷ், அதிகாரிகள் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து நகராட்சி பணியாளர் ஒருவரை ஆகாஷ் கிரிக்கெட் பேட் கொண்டு தாக்கினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.

இதுகுறித்து ஆகாஷ் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக எம்.பி.ராஜிவ் பிரதாப் ரூடி, கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் யாரேனும் செயல்பட்டால் ஏற்க முடியாது.

யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதுதொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற பாஜக எம்.பிக்கள் கூட்டத்தில், பிரதமர் மோடி எச்சரித்துள்ளார். அதனை வழிமொழிந்தே ராஜிவ் பிரதாப் ரூடி பேசியுள்ளார்.

அடுத்த செய்தி