ஆப்நகரம்

எடியூரப்பா மீது மோடி அதிருப்தி? பாஜகவில் சலசலப்பு!

எடியூரப்பா நீண்டகாலத்திற்கு முதலமைச்சராக இருக்கமாட்டார் என்று பாஜக எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 20 Oct 2020, 4:58 pm

கர்நாடகத்தில் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கர்நாடக பாஜகவிலேயே எடியூரப்பா மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
Samayam Tamil BS Yediyurappa


எடியூரப்பா இன்னும் நீண்டகாலத்திற்கு முதலமைச்சர் பதவியில் இருக்கமாட்டார் என்று பாஜக எம்எல்ஏ பசன்கவுடா யத்னல் தெரிவித்துள்ளார். மேலும், எடியூரப்பா மீது பாஜக தேசிய தலைமையும் அதிருப்தியில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விஜயபுராவில் எம்எல்ஏ பசன்கவுடா யத்னல் பேசியபோது, “நமக்கு 125 கோடி ரூபாய் மானியம் கிடைத்தது. அதை முதலமைச்சர் எடியூரப்பாவே எடுத்துக்கொண்டார். அதனால்தான் நம்மிடையே மோதல் தொடங்கியது. எடியூரப்பா எல்லாவற்றையும் சிவமோகாவிற்கே செய்கிறார்.

ஐட்டம்னு சொன்னதுக்கு மன்னிப்பு கேட்க முடியாது: அடம்பிடிக்கும் கமல்நாத்

இதை முன்னாள் அமைச்சர் உமேஷ் கட்டியும் கவனத்தில் எடுத்திருகிறார். எடியூரப்பா சிவமோகாவுக்குதான் முதலமைச்சர் என்று உமேஷ் தெரிவித்திருக்கிறார். எடியூரப்பா இங்கு நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்கமாட்டார். அவர் மீது தேசிய தலைமையும் அதிருப்தியில் இருக்கிறது.

அடுத்த முதல்வர் வட கர்நாடகத்தை சேர்ந்தவராகத்தான் இருப்பார். வட கர்நாடகத்தால்தான் இன்று எடியூரப்பா முதல்வராக இருக்கிறார். வடக்கில் பாஜகவுக்கு 100 எம்எல்ஏக்கள் கிடைத்திருக்கின்றனர். மண்ட்யாவிலும், கோலாரிலும் பாஜகவுக்கு யார் வாக்களித்தது?

வட கர்நாடகத்தில் பாஜகவுக்கு அதிக எம்எல்ஏக்கள் கிடைப்பதை பாஜக தலைமையும் அறிந்திருக்கிறது. எடியூரப்பாவுக்கு பின் அடுத்த முதல்வர் வட கர்நாடகத்தை சேர்ந்தவராகத்தான் இருப்பார் என பிரதமர் மோடியும் தெரிவித்திருக்கிறார்” என்று கூறினார்.

அடுத்த செய்தி