ஆப்நகரம்

பெண் குழந்தைகளுக்கு நல்லது சொல்லி வளருங்கள்: பாஜக எம்.எல்.ஏ. பேட்டி

இதுபோன்ற ​​ விவகாரங்கள் நடக்காமல் இருக்க அந்தந்த வீட்டுப் பெண்குழந்தைகளுக்கு நல்லதைச் சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும் என்று பேசியிருக்கிறார் பாஜக எம்.எல்.ஏ. ஒருவர்.

Samayam Tamil 4 Oct 2020, 6:35 am
நாடு முழுக்க போராட்ட மனநிலையில் மக்கள் உள்ளதாக தெரிகிறது. ஹத்ராஸ், பல்ராம்பூர் பகுதியில் நடைபெற்ற பாலியல் குற்றங்கள் அதன் தொடர்ச்சியாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வரும் பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் ஆகியவற்றால் மக்கள் மனம் கொதிநிலையில் இருக்கிறது. பல்வேறு அரசியல் அமைப்புகளும், தன்னார்வ அமைப்புகளும் இந்த விவகாரம் தொடர்பாக போராட்டங்கள் நடத்தி வருகின்றன. பல அமைப்புகள் இந்த விவகாரத்தை சர்வதேச கவனத்துக்கு கொண்டு செல்ல முயற்சித்து வருகின்றன.
Samayam Tamil surendra singh


இந்நிலையில், இதுபோன்ற விவகாரங்கள் நடக்காமல் இருக்க அந்தந்த வீட்டுப் பெண்குழந்தைகளுக்கு நல்லதைச் சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும் என்று பேசியிருக்கிறார் பாஜக எம்.எல்.ஏ. ஒருவர்.

உத்தரப் பிரதேச மாநிலம் பல்யா தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ. சுரேந்திர சிங். ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து இவரிடம் செய்தியாளர்கள் தரப்பில் கேள்வி எழுப்பட்டபோது. “இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறும். நல்லது சொல்லி வளர்ப்பது மட்டுமே இந்த விவகாரத்தில் உதவும். உங்கள் வீட்டுப் பென் குழந்தைகளுக்கு நல்லவற்றை சொல்லிக் கொடுத்து வளருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.


குற்றவாளிகள் பக்கம் திருத்தம் செய்வது என்பதிலிருந்து விலகி, மீண்டும் மீண்டும் பாதிக்கப்படுபவர்களுக்கே போதனை சொல்வது வழக்கமாகி வருகிறது. அந்த வகையில், ஏற்கனவே எரிந்து கொண்டிருக்கும் இந்தப் பிரச்சினையில் மேலும் எண்ணெய் ஊற்றியிருக்கிறார் இந்த பாஜக எம்.எல்.ஏ.

அடுத்த செய்தி