ஆப்நகரம்

சூத்திரர்களை சாதி பெயரால் அழைக்கும் விவகாரம்; பாஜக எம்.பி பேச்சால் வெடித்த சர்ச்சை!

சாதியின் பெயரால் சூத்திரர்கள் அழைப்படுவதை, அவர்கள் இழிவாக கருதுவதாக பாஜக எம்.பி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 15 Dec 2020, 11:47 am
பாஜக தலைவர்களில் ஒருவராக இருக்கும் பிரக்யா சிங் தாகூர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கக் கூடியவர். காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே-வை தேசபக்தர் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட நபர்களில் இவரும் ஒருவர். இவர் தற்போது போபால் மக்களவை தொகுதி எம்.பியாக இருக்கிறார். எனவே மக்களின் பிரதிநிதி என்ற வகையில் கருத்துகளை மிகவும் கவனமாக எடுத்துச் சொல்வது அவசியம். ஆனால் அவற்றையெல்லாம் அவர் கண்டுகொள்வது இல்லை. எப்போதும் சர்ச்சைக்குரிய பேச்சுகள் தான்.
Samayam Tamil Pragya Sing Thakur


இத்தகைய செயல்பாடுகள் பாஜக மீதான வெறுப்புணர்வை பொதுமக்களிடையே அதிகரிக்கச் செய்வதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்த சூழலில் கடந்த 12ஆம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் சீஹோரில் நிகழ்ச்சி ஒன்றில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பாஜக எம்.பி பிரக்யா சிங் தாகூர் கலந்து கொண்டார்.

இந்த வருஷம் புத்தாண்டு கொண்டாட்டம் கிடையாது; புதுசா இப்படியொரு சிக்கல்!

இதில் பேசிய போது, பிராமணர்கள் தங்களை பிராமணர்கள் என்று அழைத்தால் தவறாக நினைப்பதில்லை. வைஷ்யர்களும் தங்களை வைஷ்யர்கள் என்று அழைத்தால் தவறாக நினைப்பதில்லை. ஆனால் சூத்திரர்கள் தங்களை சாதி பெயரைக் கொண்டு அழைத்தால் அவமதிப்பாக நினைக்கிறார்கள்.

ஏனெனில் அவர்களுக்கு போதிய அறிவில்லை. சரியாக புரிந்து கொள்ளாமல் இருப்பதாக பேசியுள்ளார். இந்த கருத்து பல்வேறு தரப்பினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மேற்குவங்க மாநிலத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நாட்டா வாகனம் மீது கல்வீசி தாக்குதல் நடந்த சம்பவம் தொடர்பாக பேசினார்.

மணமேடையிலேயே கணவரை அடித்த பெரிய இடத்து நடிகை

அதாவது, மம்தா பானர்ஜியின் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரப் போகிறது. அடுத்து அங்கு இந்து ராஜ்ஜியம் அமையவுள்ளது. இதனால் அவர் மிகுந்த வெறுப்பில் இருக்கிறார். மம்தாவிற்கு இந்துக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள் என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி