ஆப்நகரம்

இரவு நேர உல்லாச விடுதியை திறந்துவைத்த பாஜக எம்பி!

உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த எம்பி சாக்‌ஷி மகாராஜ் இரவு நேர உல்லாச விடுதியை திறந்துவைத்துள்ள சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 16 Apr 2018, 11:32 am
உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த எம்பிசாக்‌ஷி மகாராஜ் இரவு நேர உல்லாச விடுதியை திறந்துவைத்துள்ள சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil sakshimaharaj-1523854176


லக்னோ மாநிலத்தில் உள்ள அலிகன்ஜ் என்னும் இடத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரவு நேர உல்லாச விடுதியைஉன்னாவ் மாவட்டத்தின் எம்பி சாக்‌ஷி மகாராஜ் திறந்து வைத்துள்ளார். இதை திறந்து வைப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை மாலை இவர் லக்னோ சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஆளும் கட்சியை சேர்ந்த எம்பிஇரவு நேர உல்லாச விடுதியை திறந்து வைத்துள்ள சம்பவம்கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சாக்‌ஷி மகாராஜ் கூறியதாவது ‘ உத்தரப்பிரதேச பாஜக முன்னாள் தலைவர்ராஜன் சிங் கேட்டுக் கொண்டதால் தான் நான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். மேலும் அவரது மருமகனுக்கு சொந்தமான உணவு விடுதி என்றுதான் என்னிடம் அவர்கள் சொன்னார்கள். இது இரவு நேர உல்லாச விடுதி என்பது எனக்கு தெரியாது. நான் ஒரு எம்பி மட்டும் அல்ல நான் ஒரு சாதுவும்கூடஎன்றுஅவர் கூறியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்புதான் இளம் பெண்ணை பாலியல் வன்புணர்வுசெய்த வழக்கில் உன்னாவ் தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் சென்காரை சிபிஐ கைது செய்தது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து உன்னாவ் மாவட்ட எம்பி சாக்‌ஷி மகாராஜ் இரவு நேர உல்லாச விடுதியை திறந்து வைத்துள்ளது மேலும் பாஜகவின் மீது மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி