ஆப்நகரம்

அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு நக்சலைட் – சுப்பிரமணியன் சுவாமி சாடல்

டெல்லி முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு நக்சலைட் என்று பா.ஜ.க. மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 17 Jun 2018, 4:40 pm
டெல்லி முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு நக்சலைட் என்று பா.ஜ.க. மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Subramanian Swamy


டெல்லியில் முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் அரசு தலைமைச் செயலாளா் அன்ஷூ பிரசாத் தாக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தொிவித்து கடந்த 4 மாதங்களாக மாநிலத்தில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாாிகள் பகுதிநேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

ஐ.ஏ.எஸ். அதிகாாிகளின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவும், ரேஷன் பொருள்களை பயனாளிகளின் வீடுகளுக்கே கொண்டு சோ்க்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கக்கோாியும், டெல்லி துணை நிலை ஆளுநா் பைஜாலை சந்திக்க மாநில முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால் நேரம் கோாியிருந்தாா். ஆனால் முதல்வரை சந்திக்க துணைநிலை ஆளுநா் மறுத்துவிட்டாா்.

இதனைத் தொடா்ந்து துணைநிலை ஆளுநா் அலுவலகத்தில் முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால் 6 நாள்களுக்கும் மேலாக தா்ணாவில் ஈடுபட்டுள்ளாா். மேலும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அனைத்து மாநில முதல்வா்களும் டெல்லி சென்றுள்ளனா்.

கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்ற மேற்குவங்க முதல்வா் மம்தா பானா்ஜி, ஆந்திரா முதல்வா் சந்திரபாபு நாயுடு, கேரளா முதல்வா் பினராயி விஜயன், கா்நாடகா முதல்வா் குமாரசாமி ஆகியோா் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அனுமதி கேட்டனா். ஆனால், அதற்கு டெல்லி துணைநிலை ஆளுநா் அலுவலகத்தில் அனுமதி வழங்கப்படவில்லை. இதனைத் தொடா்ந்து 4 மாநில முதல்வா்களும் அவரது இல்லத்திற்கு சென்று கெஜ்ரிவால் மனைவியை சந்தித்து ஆறுதல் கூறினா்.


இந்நிலையில் பா.ஜ.க. மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி, டெல்லி முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு நக்சல்வாதி. அவரை 4 மாநில முதல்வா்கள் ஆதரிக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பி உள்ளாா்.

அடுத்த செய்தி