புதுடெல்லி: தமிழக அரசியல் நிலை குறித்து டெல்லியில் நடைப்பெற்ற பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தின் போது பேசப்பட்டுள்ளது. இதில் வரும் ஜூன் மாதத்திற்கு பின் தமிழகத்திற்கு செக் வைக்கலாம் என தெரியவந்துள்ளது.
டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தலைமையில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் கடந்த ஜனவரி 6,7ம் தேதிகளில் நடைப்பெற்றது. இதில் தமிழகத்தின் சார்பில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், , தேசிய செயலாளர் எச்.ராஜா, தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைந்த பின்பு தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அரசியல் நிலை குறித்து விசாரிக்கப்பட்டுள்ளது. அப்போது ஜெயலலிதா மறைவுக்கு பின் முதலமைச்சர் பதவி ஏற்றுள்ள பன்னீர் செல்வம் குறித்தும், அதிமுக பொதுச்செயலாளராகியுள்ள சசிகலா குறித்து விசாரிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டுள்ளது. பன்னீர் செல்வத்திடம் உள்ள முதலமைச்சர் பதவி விரைவில் சசிகலா ஏற்கலாம் என தெரிகிறது என குறிப்பிடப்பட்டது.
இதுகுறித்து பாஜக தலைவரிடம் கேட்டபோது, “தமிழக அரசியல் குறித்து அமித் ஷா ஆலோசனை நடத்தினார். குடியரசுத் தலைவர், துணைத்தலைவர் தேர்தல் நடைப்பெற உள்ளதால். வரும் ஜூன் மாதம் வரை சசிகலாவையோ, அதிமுகாவையோ எதிர்க்க வேண்டாம் என அறிவுறுத்தினார்.”
எனவே தற்காலிகமாக தமிழக அரசியல் மீது மத்திய அரசு எந்த அதிரடியும் நடத்தாது என தெரிகிறது. ஆனால் ஜூன் மாதம் குடியரசுத்தலைவர் தேர்ந்தெடுத்ததற்கு பின் மத்திய அரசு கண்டிப்பாக அதிரடியை காட்டி செக் வைக்கலாம் என தெரிகிறது.
டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தலைமையில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் கடந்த ஜனவரி 6,7ம் தேதிகளில் நடைப்பெற்றது. இதில் தமிழகத்தின் சார்பில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், , தேசிய செயலாளர் எச்.ராஜா, தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைந்த பின்பு தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அரசியல் நிலை குறித்து விசாரிக்கப்பட்டுள்ளது. அப்போது ஜெயலலிதா மறைவுக்கு பின் முதலமைச்சர் பதவி ஏற்றுள்ள பன்னீர் செல்வம் குறித்தும், அதிமுக பொதுச்செயலாளராகியுள்ள சசிகலா குறித்து விசாரிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டுள்ளது. பன்னீர் செல்வத்திடம் உள்ள முதலமைச்சர் பதவி விரைவில் சசிகலா ஏற்கலாம் என தெரிகிறது என குறிப்பிடப்பட்டது.
இதுகுறித்து பாஜக தலைவரிடம் கேட்டபோது, “தமிழக அரசியல் குறித்து அமித் ஷா ஆலோசனை நடத்தினார். குடியரசுத் தலைவர், துணைத்தலைவர் தேர்தல் நடைப்பெற உள்ளதால். வரும் ஜூன் மாதம் வரை சசிகலாவையோ, அதிமுகாவையோ எதிர்க்க வேண்டாம் என அறிவுறுத்தினார்.”
எனவே தற்காலிகமாக தமிழக அரசியல் மீது மத்திய அரசு எந்த அதிரடியும் நடத்தாது என தெரிகிறது. ஆனால் ஜூன் மாதம் குடியரசுத்தலைவர் தேர்ந்தெடுத்ததற்கு பின் மத்திய அரசு கண்டிப்பாக அதிரடியை காட்டி செக் வைக்கலாம் என தெரிகிறது.