ஆப்நகரம்

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு அடிச்சுது அதிர்ஷ்டம்; பாஜக அள்ளிக் கொடுப்பதை ஏற்பாரா ஜெகன்மோகன்!

ஜெகன்மோகன் ரெட்டி கட்சிக்கு மக்களவையில் முக்கிய பொறுப்பு வழங்க பாஜக முடிவு செய்துள்ளது.

Samayam Tamil 12 Jun 2019, 5:45 pm
சமீபத்தில் நடந்து முடிந்த ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஜெகன்மோகன் ரெட்டி பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்தார். மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 இடங்களில் வென்று, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்.
Samayam Tamil Jagan with Modi


ஆந்திர மாநிலம் பிரிவுக்கு பின்னர் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று, முதலமைச்சர் ஆகும் பெருமையை ஜெகன்மோகன் ரெட்டி பெற்றார். இதையடுத்து பிரம்மாண்ட விழா எடுத்து, முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அடுத்த சில நாட்களில் அமைச்சரவை உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டது.

5 துணை முதலமைச்சர்கள் உட்பட 25 அமைச்சர்கள் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டார். இந்திய அரசியல் வரலாற்றில் இல்லாத வகையில், 5 பேருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கி ஜெகன்மோகன் ரெட்டி ஆச்சரியம் அளித்தார்.

நடிகை ரோஜாவை கைவிடாத ஆந்திர முதல்வர்; இப்படியொரு பொறுப்பு வழங்கி ஆச்சரியம்!

ஒவ்வொரு சமூகத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அமைச்சர் பொறுப்புகளை மிகவும் கவனமாக வழங்கியுள்ளார். ஊழல் முறைகேடுகள் இன்றி எம்.எல்.ஏக்கள் நடந்து கொள்ள வேண்டும் என்றும், மீறினால் உடனடியாக நீக்கப்படுவர் என்றும் எச்சரித்துள்ளார்.

தனது ஆட்சி அமைந்தவுடன், பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு, ஆந்திர மக்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறார். சுகாதாரத்துறை ஊழியர்களின் ஊதியம் ரூ.3,000ல் இருந்து, ரூ.10,000 என்று உயர்த்தினார்.

விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூ.12,500 வழங்கும் ”ரையத் பரோசா” திட்டம், “போலாவரம் திட்டத்தை” விரைவுபடுத்துதல், வீட்டிற்கு வந்து ரேஷன் பொருட்கள் வழங்குதல், மாநில போக்குவரத்து கழகத்தை ஆந்திர அரசே நடத்தும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

சட்டமன்ற தேர்தலைப் போலவே, மக்களவை தேர்தலிலும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 25ல் 22 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில் மக்களவை ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சிக்கு துணை சபாநாயகர் பதவி அளிக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

இதன்மூலம் மத்திய அரசு கொண்டு வரும் மசோதாக்களை எளிதில் நிறைவேற்றி, சட்டமாக்க ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆதரவை பெற்று விடலாம் என்று கருதுகிறது. இந்த சூழலில் பாஜகவின் கோரிக்கையை ஏற்க, ஜெகன்மோகன் ரெட்டி கால அவகாசம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி