ஆப்நகரம்

பாஜக பிரித்தாளும் செயலில் ஈடுபடுகிறது : மம்தா பானர்ஜி

மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு பிரித்தாளும் செயலில் ஈடுபடுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

TOI Contributor 2 Aug 2016, 5:46 am
மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு பிரித்தாளும் செயலில் ஈடுபடுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
Samayam Tamil bjp pursuing divisive politics says mamata banarjee
பாஜக பிரித்தாளும் செயலில் ஈடுபடுகிறது : மம்தா பானர்ஜி


கொல்கத்தாவில் சிறுபான்மையினர் நலவாழ்வு தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், பாஜ அரசு பல்வேறு செயல்பாடுகள் மூலம் நாட்டு மக்களிடையே இருக்கும் ஒற்றுமையை குலைக்கிறது என்றார். தலித்துகள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் என்று தொடர்ந்து மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும், போலி தோற்றத்துடன் வெளியே நடந்து கொள்ளும் பாஜகவை பார்த்து யாரும் நம்பிவிட வேண்டாம் என்றும் மம்தா கேட்டுக்கொண்டுள்ளார்.

மக்களுக்கு நல்லது செய்வதை விட்டு விட்டு பசுக்கள் கணக்கெடுப்பை நாடு முழுவதும் மோடி தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது என்றும் கடுமையாக சாடினார். மேலும் சமூக வலைதளங்களான ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்றவற்றை மதவெறுப்பை தூண்டுவதற்கு பாஜக முயற்சி செய்வதாகவும், அதனைக்கண்டு சிறுபான்மையின மக்கள் ஏமாந்துவிட வேண்டுடாம் என்றும் மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டுள்ளார்.

அடுத்த செய்தி