ஆப்நகரம்

மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால், ஹிட்லர் ஆட்சி தான் - எச்சரிக்கும் அரவிந்த் கெஜ்ரிவால்!

கொல்கத்தா: பாஜக ஆட்சி குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Samayam Tamil 19 Jan 2019, 11:35 pm
மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகளின் மாநாடு நடைபெற்றது. அதற்கு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமை வகித்தார்.
Samayam Tamil Kejriwal


இந்த மாநாட்டில் ஸ்டாலின், தேவேகவுடா, குமாரசாமி, சந்திரபாபு நாயுடு, அகிலேஷ் யாதவ், பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, அரவிந்த் கெஜ்ரிவால், மல்லிகார்ஜூன கார்கே (காங்கிரஸ்) முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, ஹர்த்திக் படேல், ஜிக்னேஷ் மேவானி, சத்ருகன் சின்கா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவ்வளவு தான்.

பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும் அடால்ஃப் ஹிட்லர் போன்று நாட்டை ஆட்சி செய்வார்கள். இருவரும் தேர்தல் நடைமுறைகளை மாற்றி ஜனநாயகத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிடுவார்கள்.

மதம், சாதி ரீதியிலான மோதல்களை தூண்டிவிடுகின்றனர் என்று குற்றம்சாட்டினார்.

அடுத்த செய்தி