ஆப்நகரம்

இந்தியா முழுவதும் தாமரை மலர கடும் பிரச்சாரத்தில் ஈடுபடும் பாஜக!

இந்தியா முழுவதிலும் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில், பிரச்சார கூட்டத்தை நடத்த பாஜக தலைமைக் குழு முடிவெடுத்துள்ளது.

Samayam Tamil 13 Jul 2018, 12:06 pm
இந்தியா முழுவதிலும் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில், பிரச்சார கூட்டத்தை நடத்த பாஜக தலைமைக் குழு முடிவெடுத்துள்ளது.
Samayam Tamil amit-shah-7591


பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா பல வருடங்கள் கழித்து தமிழகத்திற்குகடந்த திங்கள் கிழமை வந்தார். சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு கூட்டம் ஒன்றிலும் கலந்துக் கொண்டு சிறப்பு உரையாற்றியானர். இந்த உரையில் அமித்ஷா பொருளாதாரம், ஆட்சி மாற்றம், பாஜகவின் வெற்றி, தோல்வி, புதிய திட்டங்கள் முக்கியமான பல்வேறு தகவல்கள் குறித்து பேசினார்.

இந்நிலையில் பாஜகவின் தலைவர்கள் , முரளிதர ராவ்,எச். ராஜா,தமிழிசை சவுந்தரராஜன், கேஷவ வினாயகம், பொன்ராதாகிருஷ்ணன், எல். கணேஷ் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பாஜக கட்சியின் தலைமைக் குழு எடுத்துள்ள முக்கிய முடிவுகளை அறிவித்தனர். பாஜகவின் சார்பில்நாடு முழுவதும் பிரச்சாரம் நடத்தப்பட உள்ளதாகவும், ஒவ்வொரு தொகுதிக்கும் பாஜவின் இரு கட்சி நிர்வாகிகள் இந்த பரப்புரையில் ஈடுபடுவர் என்று தெரிவித்தனர். மேலும் அந்த தொகுதிகளில் உள்ள பிரச்சனைகளுக்கு பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினர்.

அடுத்த செய்தி