ஆப்நகரம்

சட்டசபை தேர்தலுக்காக களமிறங்கும் மேஜிக் நிபுணர்கள் - சூடுபிடிக்கும் ம.பி., பிரச்சாரக் களம்!

போபால்: சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக மேஜிக் நிபுணர்கள் களமிறக்கப்பட உள்ளனர்.

Samayam Tamil 21 Oct 2018, 3:31 pm
மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி நடத்தி வருகிறது. இந்த மாநிலத்திற்கு வரும் நவம்பர் 28ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
Samayam Tamil Magicians


வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து பல்வேறு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்திற்கு தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன. தொடர்ந்து 4வது முறையாக ஆட்சியைக் கைப்பற்ற பாஜக தீவிரம் காட்டி வருகிறது.

அதன்படி, வரும் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் மேஜிக் நிபுணர்களைக் களமிறக்க பாஜக முடிவு செய்துள்ளது. இதன்மூலம் பொதுமக்களைக் கவர்ந்து வாக்கு சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது கிராமங்கள் மற்றும் வளர்ந்து வரும் நகரப் பகுதிகளின் சந்தைப் பகுதிகளில் வாக்காளர்களைக் கவர பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று கருதுகிறது. இதுகுறித்து பேசிய பாஜக மாநில செய்தித் தொடர்பு நிர்வாகி ரஜ்னீஷ் அகர்வால், 1993 மற்றும் 2003க்கு இடையேயான 10 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சி செய்துள்ளது.

அப்போது மோசமான சாலைகள், மின் விநியோகம், அடிப்படை வசதிகள் இருந்துள்ளன. இதனை பல்வேறு வகைகளில் பொதுமக்களிடையே எடுத்துச் சொல்ல பாஜக விதவிதமான வழிமுறைகளைக் கையாள்கிறது என்றார்.

BJP to rope in magicians for campaigning in MP polls.

அடுத்த செய்தி