ஆப்நகரம்

திரிபுரா தந்திரத்துடன் தெலுங்கானாவில் தியோதரை களமிறக்கும் பாஜக!!

திரிபுராவில் பாஜகவின் வெற்றிக்கு காரணமாக இருந்த சுனில் தியோதரை தெலங்கானா மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராக தேர்வு செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 7 Mar 2018, 4:48 pm
திரிபுராவில் பாஜகவின் வெற்றிக்கு காரணமாக இருந்த சுனில் தியோதரை தெலங்கானா மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராக தேர்வு செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil bjps tripura strategist to lead in telangana
திரிபுரா தந்திரத்துடன் தெலுங்கானாவில் தியோதரை களமிறக்கும் பாஜக!!


கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சி செலுத்தி வந்த இடது சாரி முன்னணி கட்சியை தோற்கடித்து பாஜக திரிபுராவில் ஆட்சி அமைக்கிறது. முதல்வராக பிப்லாப் குமார் தேப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த மாநிலத்தில் 25 ஆண்டு காலம் ஆட்சி செலுத்தி, மிகப்பெரிய தலைவராக இருந்து வருபவர் மாணிக் சர்க்கார். தொடர்ந்து 4 முறை அந்த மாநிலத்தின் முதல்வராக இருந்தவர். எளிமைக்கு பெயர் பெற்றவர். இதுவரைக்கும் அவருக்கு என்று ஒரு சொந்த வீடு கூட கிடையாது. அரசு கொடுக்கும் பணத்தில் வாழ்ந்து வந்தார்.

அப்படிபட்டவரை பாஜக தோற்கடித்து ஆட்சி அமைக்கிறது. இதற்குக் காரணமானவர் சுனில் தியோதர். இவரது கடந்த 10 ஆண்டுகால உழைப்பால் தான் பாஜக வெற்றி பெற்றுள்ளது என்பதை கட்சி அங்கீகரித்துள்ளது.

இந்த நிலையில் 2019ல் தெலுங்கானாவில் சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளது. அந்த மாநிலத்தில் பாஜக சார்பில் பணியாற்ற சுனில் தியோதரை நியமிக்கலாம் என்று பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பாஜக தலைவர் ஒருவர் கூறுகையில், ‘’சுனில் தியோதரை மற்ற மாநிலங்களிலும் கட்சி பயன்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால், இந்த விஷயத்தில் எந்த முடிவையும் கட்சி எடுக்கவில்லை’’ என்றார்.

ஆர்எஸ்எஸ் பிரச்சாகராக இருக்கும் சுனில் தியோதர் திரிபுரா மாநிலத்தில் பழங்குடியினர் மற்றும் இளைஞர்களை ஈர்த்து கட்சிக்கு வெற்றி வாய்ப்பை பெற்றுக் கொடுத்தார். இவர் மும்பையைச் சேர்ந்தவர்.

மேலும், தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் சமீபத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளை எதிர்க்க மூன்றாவது கூட்டணி வேண்டும் என்று கூறியிருந்தார். இதுதொடர்பாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் தொலைபேசியில் பேசி இருந்தார். இதைத் தொடர்ந்து திமுக செயல்தலைவர் ஸ்டாலினுடன் தொலைபேசியில் மம்தா பானர்ஜி சுமார் 12 நிமிடங்கள் பேசியதாக செய்தி வெளியானது. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் பாஜக தனது கவனத்தை திருப்பியுள்ளது.

அடுத்த செய்தி