ஆப்நகரம்

காஷ்மீரில் கையெறி குண்டு தாக்குதல்... மூவர் படுகாயம்... அடுத்தது என்ன?

ஸ்ரீநகரில் உள்ள ஹஸ்ரத்பல் பகுதியில் அமைந்திருக்கும் காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் சர் சையத் ​​நுழைவாயிலுக்கு அருகே உள்ள வாகனம் நிறுத்தும் பகுதியில் இத்தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

Samayam Tamil 26 Nov 2019, 5:57 pm
காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலைக் கழகத்தின் அருகே தீவிரவாதிகள் சிலர் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் 3 பேர் காயமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil kashmir-blast-ani


2019 ஆம் ஆண்டுவரை மாநிலமாக இருந்த ஜம்மு-காஷ்மீர், இந்த ஆண்டு ஆகஸ்ட் ஜம்மு, லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதற்கு ஏதுவாக, அதுவரையில் ஜம்மு காஷ்மீர் என்ற மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்த இந்திய அரசியல் சாசனத்தின் சட்டபிரிவு 370 ஐ ரத்து செய்தது மத்திய அரசு.

Maharashtra Politics: மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் ராஜினாமா; முதல்வரும் ராஜினாமாவா?

இந்த அறிவிப்பு கடந்த மாதம் அக்டோபர் 31ஆம் தேதி, அதிகாரப் பூர்வமாக அந்தந்த யூனியன் பிரதேசங்களில் நடைமுறைக்கு வந்தது. ஜம்மு, லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் தனித்து செயல்பட அன்று முதல் தொடங்கின.

சட்டப்பிரிவு 370 ரத்து செய்ய்யப்பட்ட நடவடிக்கையின் போது பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு, நெடுநாட்களாக நீடித்து வந்தது. பின் இயல்பு நிலை திரும்பியதாக அறிவிக்கப்பட்டு 144 தடை உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. இருப்பினும், ஜம்மு -காஷ்மீரில் அவ்வப்போது அங்காங்கே பயங்கரவாதத் செயல்கள் நடைபெற்று வருகின்றன.



அந்த வகையில், ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் நுழைவாயில் ஒன்றுக்கு அருகில், தீவிரவாதிகள் கையெறிக் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த எதிர்பாராத விதமான தாக்குதலில் சுமார் 3 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பீஸ் கெடச்சாலும் வெங்காய தயிர் பச்சடி கிடைக்காது..! பிரியாணி பிரியர்களுக்கு வந்த சோதனை...

ஸ்ரீநகரில் உள்ள ஹஸ்ரத்பல் பகுதியில் அமைந்திருக்கும் காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் சர் சையத் நுழைவாயிலுக்கு அருகே உள்ள வாகனம் நிறுத்தும் பகுதியில் இத்தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

இதில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.

இனி வாகனக் கடன் ஈசியா வாங்கலாம்: அசோக் லேலண்ட்

மேலும், இது இத்துடன் நின்றுவிடாது, இன்னும் ஆங்காங்கே வெடிகுண்டுகள் வெடிக்க வாய்ப்புள்ளதாகவும், உள்ளூர் மக்களுக்கு ஜம்மூ-காஷ்மீர் போலீசார் நேற்று எச்சரிக்கை விடுத்து உள்ளனர். இந்நிலையில், இன்று இந்த இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது அச்சத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக அமைந்துள்ளது.

அடுத்த செய்தி