பெங்களூரு: மகதாயி நதி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடக மாநிலத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
மகதாயி நதி, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா மாநிலங்களில் ஓடுகிறது. இந்த நதிநீர் பங்கீடு தொடர்பாக பிரச்சனை இருந்து வருகிறது. இது தொடர்பாக மகதாயி நடுவர் மன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த நடுவர் மன்றத்தில் வடகர்நாடகாவின் தார்வார், கதக், பெலகாவி, பாகல்கோட் மாவட்டங்களின் குடிநீருக்காக 7.56 டி.எம்.சி தண்ணீர் எடுக்க கர்நாடகா கோரியிருந்தது.
கர்நாடகாவின் கோரிக்கையை நடுவர் மன்றம் சில தினங்களுக்கு முன்னர் தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பு வெளியானவுடன் கர்நாடகாவில் ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்தன.
இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு கன்னடர் அமைப்புகளின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, அம்மாநிலம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
மகதாயி நதி, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா மாநிலங்களில் ஓடுகிறது. இந்த நதிநீர் பங்கீடு தொடர்பாக பிரச்சனை இருந்து வருகிறது. இது தொடர்பாக மகதாயி நடுவர் மன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த நடுவர் மன்றத்தில் வடகர்நாடகாவின் தார்வார், கதக், பெலகாவி, பாகல்கோட் மாவட்டங்களின் குடிநீருக்காக 7.56 டி.எம்.சி தண்ணீர் எடுக்க கர்நாடகா கோரியிருந்தது.
கர்நாடகாவின் கோரிக்கையை நடுவர் மன்றம் சில தினங்களுக்கு முன்னர் தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பு வெளியானவுடன் கர்நாடகாவில் ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்தன.
இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு கன்னடர் அமைப்புகளின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, அம்மாநிலம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.