ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா நதியில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 26 ஆக உயா்ந்துள்ளது. மேலும் சிலரை தேடி வருவதாக அம்மாநில அரசு தொிவித்துள்ளது.
ஆந்திரா மாநிலம் பிரம்மபட்டணம் அருகே கிருஷ்ணா நதி பாய்கிறது. விடுமுறை தினங்களில் சில சுற்றுலா பயணிகள் கிருஷ்ணா நதியில் படகில் பயணம் மேற்கொள்வது வழக்கமான ஒன்றாக இருந்துள்ளது.
ஆனால் இந்த படகு சட்டப்பூா்வமாக நடைபெறுவதாக தொிவிக்கப்படவில்லை. ஏனெனில் இங்கு படகுப்பயணம் மேற்கொள்பவா்களுக்கு தேவையான லைவ் ஜேக்கெட் போன்ற தற்காப்பு பொருட்கள் வழங்கப்படுவதில்லை.
இதனால் சுற்றுலாப் பயணிகள் சட்டவிரோதமாக இந்தப்பகுதியில் படகுப்பயணம் மேற்கொண்டு வந்துள்ளனா். இந்நிலையில் இன்று மாலை 40க்கும் அதிகமான பயணிகள் படகில் பயணம் மேற்கொண்டுள்ளனா்.
பயணிகள் அளவுக்கு அதிகமாக இருந்ததால் படகு நடு ஆற்றில் கவிழ்ந்துள்ளது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக சென்று 20 போ் வரை காப்பாற்றியுள்ளனா். மேலும் தகவல் தொிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து தேசிய போிடா் மீட்புக்குழுவினா் விரைந்து வந்துள்ளனா்.
பின்னா் நடைபெற்ற மீட்புப்பணியில் தொடா்ந்து உடல்கள் மீட்கப்பட்டன. இறுதியில் 26 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் சிலரை காணவில்லை என்பதால் அவா்களை தேடி வருவதாகவும் ஆந்திரா மாநில டிஜிபி சாம்பசிவராவ் தொிவித்துள்ளாா்.
ஆந்திரா மாநிலம் பிரம்மபட்டணம் அருகே கிருஷ்ணா நதி பாய்கிறது. விடுமுறை தினங்களில் சில சுற்றுலா பயணிகள் கிருஷ்ணா நதியில் படகில் பயணம் மேற்கொள்வது வழக்கமான ஒன்றாக இருந்துள்ளது.
ஆனால் இந்த படகு சட்டப்பூா்வமாக நடைபெறுவதாக தொிவிக்கப்படவில்லை. ஏனெனில் இங்கு படகுப்பயணம் மேற்கொள்பவா்களுக்கு தேவையான லைவ் ஜேக்கெட் போன்ற தற்காப்பு பொருட்கள் வழங்கப்படுவதில்லை.
இதனால் சுற்றுலாப் பயணிகள் சட்டவிரோதமாக இந்தப்பகுதியில் படகுப்பயணம் மேற்கொண்டு வந்துள்ளனா். இந்நிலையில் இன்று மாலை 40க்கும் அதிகமான பயணிகள் படகில் பயணம் மேற்கொண்டுள்ளனா்.
பயணிகள் அளவுக்கு அதிகமாக இருந்ததால் படகு நடு ஆற்றில் கவிழ்ந்துள்ளது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக சென்று 20 போ் வரை காப்பாற்றியுள்ளனா். மேலும் தகவல் தொிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து தேசிய போிடா் மீட்புக்குழுவினா் விரைந்து வந்துள்ளனா்.
பின்னா் நடைபெற்ற மீட்புப்பணியில் தொடா்ந்து உடல்கள் மீட்கப்பட்டன. இறுதியில் 26 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் சிலரை காணவில்லை என்பதால் அவா்களை தேடி வருவதாகவும் ஆந்திரா மாநில டிஜிபி சாம்பசிவராவ் தொிவித்துள்ளாா்.