ஆப்நகரம்

விபத்துக்குள்ளான இந்தோனேசியா விமானத்தை இயக்கிய இந்திய விமானியின் உடல் மீட்பு!!

கடலில் விழுந்து விபத்துக்குள்ளான லயன் ஏர் விமானத்தை இயக்கிய இந்திய விமானி பவ்ய சுனேஜாவின் உடல், ஏறக்குறைய 1 மாதத்திற்குப் பின் மீட்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 25 Nov 2018, 5:18 pm
கடந்த மாதம், கடலில் விழுந்து விபத்துக்குள்ளான லயன் ஏர் விமானத்தை இயக்கிய இந்திய விமானி பவ்ய சுனேஜாவின் உடல், ஏறக்குறைய 1 மாதத்திற்குப் பின் மீட்கப்பட்டுள்ளது.
Samayam Tamil விபத்துக்குள்ளான இந்தோனேசியா விமானத்தை இயக்கிய இந்திய விமானியின் உடல் மீட்பு!!
விபத்துக்குள்ளான இந்தோனேசியா விமானத்தை இயக்கிய இந்திய விமானியின் உடல் மீட்பு!!


கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி, லயன் ஏர் நிறுவனத்தின் விமானம், இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இருந்து பனால் பினாங் நகரத்திற்குப் பயணம் மேற்கொண்டது.

எதிர்பாராத விதமாக அந்த விமானம், பாதி வழியில் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், விமானத்தில் பயணித்த 189 பேரும் பரிதாபகரமாக உயிரிழந்தனர். உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விபத்தில், விபத்தில் சிக்கிய பயணிகளின் உடல்களை மீட்கும் பணியும், கறுப்புப் பெட்டியை மீட்கும் பணியும் முடுக்கிவிடப்பட்டது.

கறுப்புப் பெட்டி மீட்கப் பட்ட நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான விபத்துக்குள்ளானது தெரியவந்தது. ஆனால், விபத்துக்குள்ளான பயணிகளின் உடல்களை கண்டுபிடிக்க முடியாததால், உடல்களை மீட்கும் பணி கைவிடப்படுவதாக இந்தோனேசியா அரசு அறிவித்தது.

இந்நிலையில், இந்த விமானத்தை இயக்கிய இந்தியாவைச் சேர்ந்த விமானி பவ்ய சுனேஜாவின் உடல், 27 நாட்கள் கழித்து தற்போது மீட்கப்பட்டுள்ளதாக, இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். அவரின் உடல், தற்போது இந்தோனேசியாவில் உள்ள இந்தியத் தூதகரத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்த பவ்ய சுனேஜா, தீபாவளி தினத்தைக் கொண்டாட விடுப்புக் கேட்டிருந்த நிலையில், அதற்கு முன்னதாகவே விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி