ஆப்நகரம்

மணிப்பூரில் மீண்டும் குண்டு வெடிப்பு - 4 காவலர்கள் உட்பட 5 பேர் படுகாயம்

மணிப்பூர் மாநிலம் இம்பால் மாவட்டத்தில் உள்ள பஜார் பகுதியில், இன்று நடைபெற்ற குண்டு வெடிப்பில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Samayam Tamil 5 Nov 2019, 1:21 pm
மணிப்பூர் மாநிலம் இம்பால் மாவட்டத்தில் உள்ள பஜார் பகுதியில், இன்று நடைபெற்ற குண்டு வெடிப்பில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
Samayam Tamil bomb blast in manipur 5 injured
மணிப்பூரில் மீண்டும் குண்டு வெடிப்பு - 4 காவலர்கள் உட்பட 5 பேர் படுகாயம்


கடந்த 3 தினங்களாக மணிப்பூரில் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்த பேச்சு அதிகரித்துள்ளது. கிழக்கு இம்பாலில் கடந்த சனிக்கிழமை (நவம்பர், 2 ஆம் தேதி ) காலை 11.30 மணியளவில் நடந்த குண்டு வெடிப்பில் எல்லைப் பாதுகாப்புப் படை (BSF - Border Security force) வீரர்கள் மூவர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து போலிசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக துப்பு துலக்கி வருகின்றனர். எனினும் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் இன்று இம்பால் பஜார் பகுதியில் மீண்டும் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

இதில் காவலர்கள் மற்றும் பொதுமக்களில் ஒருவர் உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வெடித்த குண்டு மிக மிக ஆபத்தானது என்று இல்லாதபோதும், காயமடைந்தவர்கள் குண்டு வெடித்த இடத்துக்கு பக்கத்தில் இருந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், சம்பவம் நடந்த அடுத்த சில நிமிடங்களில் காவல்துறை அங்கிருந்த மக்களை அப்புறப்படுத்தி அந்த இடத்தை பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து காவல் துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடர்ந்து வருகிறது.

அடுத்த செய்தி