ஆப்நகரம்

தாஜ்மஹாலில் வெடிகுண்டு: போலீஸை மிரட்டிய போன் கால்

உலக அதிசயமான தாஜ்மஹாலைப் பற்றிய சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில் தாஜ்மஹாலைத் தகர்க்க வெடிகுண்டு வைக்கப்பட்டதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

TNN 24 Oct 2017, 1:19 pm
உலக அதிசயமான தாஜ்மஹாலைப் பற்றிய சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில் தாஜ்மஹாலைத் தகர்க்க வெடிகுண்டு வைக்கப்பட்டதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil bomb threat at taj mahal turns out to be hoax
தாஜ்மஹாலில் வெடிகுண்டு: போலீஸை மிரட்டிய போன் கால்


உத்தரப் பிரதேச அரசு அண்மையில் வெளியிட்ட புதிய சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் தாஜ்மஹால் இடம்பெறவில்லை. உலக அதிசயமாக போற்றப்படும் தாஜ்மஹாலை சுற்றுலாத்தலம் இல்லை என்பது இந்தியாவுக்கே அவமானம் என்று பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரித்தனர்.

இச்சூழலில், இந்தியாவின் மீது படையெடுத்த முகலாய துரோகிகள் தாஜ்மஹாலைக் கட்டினார்கள் என்று பாஜக எம்.எல்.ஏ. சங்கீத் சோம் கூறினார். பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமியும் தாஜ்மஹால் ஜெய்ப்பூர் மன்னரிடமிருந்து திருடப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டது என்று கூறியுள்ளார். இதனால், இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

இதனிடையே, உத்தரப் பிரதேச முதல்வர் நாளை மறுநாள் ஆக்ரா சென்று தாஜ்மஹாலில் ஆய்வு நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார். இந்நிலையில், நேற்று நேற்று இரவு 9.30 மணி அளவில் லக்னோ காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மொபைல் போன் காலில் தாஜ்மஹாலில் குண்டு வைக்கப்பட்டிருக்கிறது என்றும் சிறிது நேரத்தில் அது வெடிக்கும் என்று மர்ம நபர் ஒருவர் கூறியுள்ளார்.

உடனே ஆக்ரா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட தாஜ்மஹாலில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இரவு 11 மணி வரை நீடித்த தேடுதல் வேட்டைக்குப் பிறகு குண்டு எதுவும் இல்லை என்று உறுதிசெய்யப்பட்டது. வெடிகுண்டு வைத்திருப்பதாக போனில் பேசியவரைக் மொபைல் நெட்வொர் மூலம் கண்டுபிடிக்க முயன்றபோது அவரது மொபைல் அணைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் வேறு கோணங்களில் வதந்தி கிளப்பிய ஆசாமியைப் பிடிக்க விசாரணை தொடர்கிறது.

அடுத்த செய்தி