ஆப்நகரம்

பஸ் டிக்கெட் முன்பதிவில் அசத்தல் தள்ளுபடி; பெங்களூரு மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

வாயு வஜ்ரா பேருந்துகளில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 6 Dec 2020, 3:37 pm
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றுவர மாநகராட்சி சார்பில் “வாயு வஜ்ரா” என்ற ஏசி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை நகரின் பல்வேறு வழித்தடங்களில் பயணிக்கின்றன. இதற்கான டிக்கெட்களை முன்பதிவு செய்யும் நடைமுறை இன்று முதல் தொடங்கியுள்ளது. அதாவது KSRTC முன்பதிவு மையங்களிலும், www.ksrtc.in என்ற இணையதளத்திலும், KSRTC மொபைல் ஆப் மூலமும் டிக்கெட்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த வாயு வஜ்ரா பேருந்துகளில் பயணிக்கும் போது பயணிகள் தங்களுடைய பிரிண்டட் டிக்கெட்கள் அல்லது இ-டிக்கெட்கள் அல்லது முன்பதிவு செய்த எஸ்.எம்.எஸ்சை நடத்துநரிடம் காண்பிக்க வேண்டும்.
Samayam Tamil Vayu Vajra Buses


மேலும் தனது அடையாள அட்டையையும் காட்ட வேண்டும். தற்போது நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு (KIA) 164 முறையும், விமான நிலையத்தில் இருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு 171 முறையும் வாயு வஜ்ரா பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இவை ஹெச்.ஏ.எல் மெயின் கேட் - விமான நிலையம், ஒயிட்ஃபீல்ட் TTMC - விமான நிலையம், பனசங்கரி TTMC - விமான நிலையம், கடுகோடி பேருந்து நிலையம் - விமான நிலையம், எலக்ட்ரானிக்ஸ் சிட்டி - விமான நிலையம், சந்தபுரா - விமான நிலையம், கெம்பகவுடா பேருந்து நிலையம் - விமான நிலையம்.

இந்தியாவின் புதிய நாடாளுமன்றம்: எப்படி இருக்கும்; என்னென்ன வசதிகள் கிடைக்கும்?

மைசூரு ரோடு - விமான நிலையம், டி.எல்.எஃப் அப்பார்ட்மெண்ட் - விமான நிலையம் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், வாயு வஜ்ரா பேருந்துகளில் பயணிக்க ஒரே டிக்கெட்டில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் முன்பதிவு (Group Booking) செய்தால் 5 சதவீத தள்ளுபடி கிடைக்கும். மேலும் பயணம் செய்து மீண்டும் திரும்பி வருவதற்கு டிக்கெட் முன்பதிவு செய்தால் 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி