ஆப்நகரம்

200 அடி ஆழம்; தவறி விழுந்த சிறுவன் - ஆழ்துளைக் கிணற்றில் அடுத்த அதிர்ச்சி!

ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Samayam Tamil 4 Nov 2020, 5:14 pm
விவசாய தேவைக்காக ஆழ்துளைக் கிணறுகள் போடப்படுகின்றன. அவற்றில் தண்ணீர் கிடைத்து விட்டால், பம்பு செட் போட்டு உரிய ஏற்பாடுகளைச் செய்து விடுகின்றனர். ஆனால் தண்ணீர் கிடைக்கவில்லை எனில், பலரும் அப்படியே விட்டு விடுகின்றனர். இதனால் குழந்தைகள் தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகின்றன. இதற்கான தொழில்நுட்ப வசதிகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக கூறினாலும், உயிரிழப்புகளை ஏன் தடுக்க முடியவில்லை என்று கேள்வி எழுகிறது.
Samayam Tamil Borewell Accident in MP


இது உலக அரங்கில் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நாடு என்ற பிம்பத்தை அப்படியே சுக்கு நூறாக உடைத்து விடுகிறது. தமிழகத்தில் சுஜித் என்ற சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து இறந்ததன் ஓராண்டு முடிந்து சில நாட்களே ஆகின்றன. இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலம் நிவாடி மாவட்டத்தில் உள்ள பாராபுஜுர்க் கிராமத்தில் இன்று அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஒருபக்கம் ஹேப்பி; மறுபக்கம் பெரிய ஷாக் - ஆட்டம் காட்டும் கொரோனா வைரஸ்!

இந்த கிராமத்தில் ஹரிகிஷன் குஸ்வாஹா என்பவரின் மகன் பிரகலாத் விவசாய நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு சமீபத்தில் தோண்டப்பட்ட ஆழ்துளைக் கிணறு ஒன்று அப்படியே திறந்து கிடந்துள்ளது. இந்த சூழலில் எதிர்பாராதவிதமாக ஆழ்துளைக் கிணற்றில் சிறுவன் தவறி விழுந்துள்ளான்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் உடனே போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆழ்துளைக் கிணறு 200 அடி ஆழம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சிறுவன் எத்தனை அடி ஆழத்தில் இருக்கிறான் என்று தெரியவில்லை. மாவட்ட நிர்வாகமும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. ஆழ்துளைக் கிணறு தொடர்பான வல்லுநர்களும் சென்றுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி