ஆப்நகரம்

தாய், சகோதரியை கொன்ற மாணவனுக்கு ரூ.25,000!

நொய்டாவில் தாயையும் சகோதரியையும் கொன்ற மாணவனுக்கு ரூ.25,000 பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 7 Jul 2018, 5:06 pm
நொய்டாவில் தாயையும் சகோதரியையும் கொன்ற மாணவனுக்கு ரூ.25,000 பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil 64890950


உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த 16 வயது மாணவன் ஒருவன் தனது தாயையும் சகோதரியையும் கொன்றதாக தண்டனை பெற்று கடந்த டிசம்பர் மாதம் சீர்திருத்தப் விடுதியில் சேர்க்கப்பட்டான்.

இந்நிலையில், சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வை எழுதிய அவன் 500க்கு 255 மதிப்பெண்கள் பெற்றுள்ளான். இதன் மூலம் அவனுக்கு உ.பி. அரசின் ரூ.25,000 பரிசுத் தொகை கிடைக்க உள்ளது.

அந்த மாநிலத்தில் கடந்த ஆண்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டவர்களில் 50 பேர் 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் முதல் நிலையில் தேரியவர்களுக்கு ரூ.51,000 மற்றும் மற்றவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகையை பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அளிக்கிறது.

அடுத்த செய்தி