ஆப்நகரம்

இந்திய மக்களின் உணர்வுகளை சிதைக்க பாஜக முயற்சி: சோனியா குற்றச்சாட்டு

இந்திய மக்களை குறுகிய மனப்பான்மை உடையவர்களாக மாற்றும் வகையில் பல தவறான பிரசாரங்களை பாஜக மேற்கொண்டுள்ளதாக, சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

TNN 6 Jun 2017, 4:36 pm
இந்திய மக்களை குறுகிய மனப்பான்மை உடையவர்களாக மாற்றும் வகையில் பல தவறான பிரசாரங்களை பாஜக மேற்கொண்டுள்ளதாக, சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
Samayam Tamil brazen campaign on to impose regressive narrow minded view sonia gandhi
இந்திய மக்களின் உணர்வுகளை சிதைக்க பாஜக முயற்சி: சோனியா குற்றச்சாட்டு


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தற்போது உடல்நலம் தேறிவருகிறார். இந்நிலையில், டெல்லியில் இன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தின்போது, சோனியா காந்தி, நாட்டின் அரசியல் சூழல் பற்றி விரிவாக விவாதித்ததாகக் கூறப்படுகிறது.

நாட்டின் அரசியல் வெகுவாகப் பாதித்துள்ளதாகவும், இதனை மாற்றம் செய்ய வேண்டிய கடமை காங்கிரஸ் கட்சிக்கு உள்ளதாகவும் அப்போது, காங்கிரஸ் தலைவர்களிடையே சோனியா காந்தி பேசியுள்ளார்.

மேலும், ‘’தவறான பிரசாரங்களை செய்து, இந்திய மக்களின் பன்முகத் தன்மையை சிதைத்து, குறுகிய மனப்பான்மை உடையவர்களாக, பாஜக மாற்ற தொடங்கியுள்ளது. இதனை நாம் சமாளித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். பாஜகவுக்கு தகுந்த பதிலடியை நாம் தர வேண்டும். இந்தியாவின் பன்முகத் தன்மையையும், கலாசாரத்தையும் பாதுகாக்க வேண்டியது நமது கடமை,’’ என்றும், சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

Congress president Sonia Gandhi on Tuesday hit out at the Modi government, saying there is a brazen campaign to straitjacket the whole country into a regressive and narrow-minded world view.

அடுத்த செய்தி