ஆப்நகரம்

திருமண நாளில் அலங்கரிக்கப்பட்ட ஆட்டோவை ஓட்டி வந்த மணப்பெண்.. அடுத்து நடந்த சுவாரஸ்யத்தை பாருங்கள்!

கேரளா மாநிலம் குறிச்சித்தனம் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண ஸ்வாமி கோயில் உள்ளது. அங்கு மகிமா என்ற பெண்ணுக்கும், சுராஜ் என்பவருக்கும் திருமணம் நடைப்பெற்றது.

Samayam Tamil 11 May 2019, 4:32 pm
கேரளா மாநிலம் குறிச்சித்தனம் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண ஸ்வாமி கோயில் உள்ளது. அங்கு மகிமா என்ற பெண்ணுக்கும், சுராஜ் என்பவருக்கும் திருமணம் நடைப்பெற்றது.
Samayam Tamil Auto Rickshaw


மகிமாவின் திருமணத்திற்காக ஆட்டோவில் முழு மேக்கப்புடன் ஆட்டோ ஓட்டிக் கொண்டு கோயிலை வந்தடைந்தார். இந்த திருமணத்தில் சுவாரஸ்யத்தை பார்க்கலாம்.

கேரளாவின் உழவூர் பகுதியை சேர்ந்தவர் மோகனன் நாயர். இவர் கடந்த 1995ம் ஆண்டு முதல் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகின்றார்.

இந்நிலையில் மோகனன் நாயர் தன் மகளின் திருமணத்தின் போது தன் குடும்பத்தினாரை ஆட்டோவில் அழைத்து செல்ல வேண்டும் என்பது தான் அவரது ஆசை.

ஆட்டோ ஓட்டிய மணமகள்:
இந்நிலையில் தன் தந்தையின் ஆசையை நிறைவேற்ற தன் தந்தையின் ஆட்டோவை அலங்கரித்து, அதை கெத்தாக குடும்பத்தை அழைத்துக் கொண்டு மணமகளே ஆட்டோவை ஓட்டி வந்துள்ளார்.

மகிமாவின் ஆட்டோ முன்னால் செல்ல, அதை தொடர்ந்து வரிசையாக மோகனன் நாயரின் நண்பர்கள் ஆட்டோவில் ஊர்வலம் போல வந்தனர்.

அடுத்த செய்தி