ஆப்நகரம்

மும்பை ஆற்றுப்பால விபத்து: 20 பேர் மாயம்

மும்பை - கோவா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றுப் பாலம், வெள்ளம் காரணமாக இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேருந்துகளும், 20 பேரும் மாயமாகியுள்ளனர்.

TOI Contributor 3 Aug 2016, 9:57 am
மும்பை: மும்பை - கோவா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றுப் பாலம், வெள்ளம் காரணமாக இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேருந்துகளும், 20 பேரும் மாயமாகியுள்ளனர்.
Samayam Tamil bridge on mumbai goa highway collapses 20 people and 2 buses missing
மும்பை ஆற்றுப்பால விபத்து: 20 பேர் மாயம்


மும்பை - கோவா தேசிய நெடுஞ்சாலையில் சாவித்திரி ஆற்றுப் பாலம், வெள்ளம் காரணமாக இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, நிலைமை குறித்து ஆராயப்பட்டது. அதன்பின்னர், பாலத்தின் ஒரு வழி திறந்து விடப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த விபத்தில் சிக்கி இரண்டு பேருந்துகளும் அதில் பயணம் செய்த 22 பேரும் மாயமாகியுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை ராய்காட் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சஞ்சய் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

Mumbai-Goa highway bridge collapse: 2 buses with 22 people onboard, missing, says Raigad ASP Sanjay Patil.— ANI (@ANI_news) August 3, 2016 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், அங்கு மீட்பு பணிகளை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், மாயமானவர்களை தேடும் பணிக்காக, சீட்டக் ஹெலிக்காப்டரை இந்திய கடலோர காவல்படை அனுப்பி வைத்துள்ளது.

இதனிடையே, அங்கு இரண்டு பாலங்கள் இருப்பதாகவும், ஒன்று பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பழமையான ஒன்று. மற்றொன்று தற்போது கட்டப்பட்ட புதிய பாலம். பழைய பாலமே இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது என மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி