ஆப்நகரம்

மறைந்த கன்னட பெண் பத்திரிகையாளருக்கு பிரிட்டன் அரசு விருது !

மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட, பத்திரிகையாளர், கவுரி லங்கேஷுக்கு பிரிட்டன் அரசு விருது வழங்கியுள்ளது.

TNN 7 Oct 2017, 10:35 am
மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட, பத்திரிகையாளர், கவுரி லங்கேஷுக்கு பிரிட்டன் அரசு விருது வழங்கியுள்ளது.
Samayam Tamil britain honours gauri lankesh with award
மறைந்த கன்னட பெண் பத்திரிகையாளருக்கு பிரிட்டன் அரசு விருது !

கர்நாடகாவில், 'கவுரி லங்கேஷ்' என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர், கவுரி லங்கேஷ். இவர், சமீபத்தில், அவரது வீட்டு வாசலிலேயே, மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்து மதவாதிகளுக்கு கொலையில் பங்கு இருப்பதாக பலரால் கூறப்பட்டு வருகிறது.

மேலும் அவர் மதவாத அமைப்புகளை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதை ஏற்றுக்கொள்ள முடியதவர்கள்தான் அவரை கொன்றுள்ளனர் என்றும் கூறப்பட்டு வருகிறது.

ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனை சேர்ந்த, 'ரா இன் வார்' என்ற அமைப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைக்காக போராடும் பெண்களுக்கு, அன்னா பொலிகோவஸ்கயா விருது வழங்கி கவுரவிக்கிறது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், 2006ல் கொல்லப்பட்ட, பத்திரிகையாளர், அன்னா பொலிகோவஸ்கயா நினைவாக, இந்த விருதை வழங்கி வருகிறது.


இந்நிலையில், பெங்களூரில், கவுரி லங்கேஷின் உறவினர்கள், செய்தியாளர்களிடம் கூறியதாவது: அன்னா பொலிகோவஸ்கயா விருதுக்கு, கவுரி லங்கேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, எங்களுக்கு தகவல் வந்துள்ளது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு, கவுரி லங்கேஷ் மற்றும் பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை எதிர்த்து போராடும், குலாலாய் இஸ்மாயிலுக்கு பகிர்ந்து வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

britain honours gauri lankesh with award

அடுத்த செய்தி