சமூக ஊடகங்களில், பாதுகாப்புப் படை வீரர்களுக்கு தரமற்ற உணவு விநியோகிக்கப்படுவதாகப் புகார் அளித்த பிஎஸ்எஃப் வீரர் தேஜ் பகதூர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை பிஎஸ்எஃப் வெளியிட்டுள்ளது. சில மாதம் முன்பாக, பிஎஸ்எஃப்., எனப்படும் எல்லை பாதுகாப்புப் படையில் பணிபுரியும் தேஜ்பகதூர் யாதவ் என்பவர், தன்னைப் போன்ற தேசத்தை பாதுகாக்கும் வீரர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக, வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். இது சமூக ஊடகங்களில் வைரலாகப் பகிரப்பட்டது.
இதற்கு பல தரப்பினரும் அதிர்ச்சி தெரிவித்ததை தொடர்ந்து, இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அத்துடன், டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது.
இந்நிலையில், தேஜ்பகதூர் யாதவ், ஒழுங்கீன குற்றச்சாட்டுகளுக்காக பணி நீக்கம் செய்யப்படுவதாக, பிஎஸ்எஃப் அறிவித்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
BSF sources say that it has found Tej Bahadur Yadav guilty on certain charges of indiscipline. He has been dismissed from service as per the provisions of BSF act and rule.
இதற்கான உத்தரவை பிஎஸ்எஃப் வெளியிட்டுள்ளது. சில மாதம் முன்பாக, பிஎஸ்எஃப்., எனப்படும் எல்லை பாதுகாப்புப் படையில் பணிபுரியும் தேஜ்பகதூர் யாதவ் என்பவர், தன்னைப் போன்ற தேசத்தை பாதுகாக்கும் வீரர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக, வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். இது சமூக ஊடகங்களில் வைரலாகப் பகிரப்பட்டது.
இதற்கு பல தரப்பினரும் அதிர்ச்சி தெரிவித்ததை தொடர்ந்து, இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அத்துடன், டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது.
இந்நிலையில், தேஜ்பகதூர் யாதவ், ஒழுங்கீன குற்றச்சாட்டுகளுக்காக பணி நீக்கம் செய்யப்படுவதாக, பிஎஸ்எஃப் அறிவித்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
BSF sources say that it has found Tej Bahadur Yadav guilty on certain charges of indiscipline. He has been dismissed from service as per the provisions of BSF act and rule.