ஆப்நகரம்

தாய்லாந்து மன்னருக்கு பெளத்த மற்றும் பிராமண முறையில் சடங்கு

தாய்லாந்து மன்னர் மஹா வாஜிரலங்கோன் வம்சாவளியாக செய்யப்படும் ஓர் பிராமண மற்றும் பெளத்த சடங்கை செய்துகொண்டுள்ளார். கடந்த 7 தலைமுறைகளாக மன்னராக இருந்துவரும் வாஜி, தன்னை வாழும் கடவுளாக அறியப்பட இச்சடங்கை செய்துகொடுள்ளது குறிப்பிடத்தக்கது.

Samayam Tamil 4 May 2019, 3:51 pm
தாய்லாந்து மன்னர் மஹா வாஜிரலங்கோன் வம்சாவளியாக செய்யப்படும் ஓர் பிராமண மற்றும் பெளத்த சடங்கை செய்துகொண்டுள்ளார். கடந்த 7 தலைமுறைகளாக மன்னராக இருந்துவரும் வாஜி, தன்னை வாழும் கடவுளாக அறியப்பட இச்சடங்கை செய்துகொடுள்ளது குறிப்பிடத்தக்கது.
Samayam Tamil fb2de59ad5f94c0386fc14ca8b64eca0_18


ராணி சுதிடா இச்சடங்கில் கலந்துகொண்டார். இதுவரை 3 முறை விவாகரத்து செய்துள்ள மன்னர் வாஜி, 4-ஆவதாக சுதிடாவை மணக்கிறார். மன்னர் வாஹி வெள்ளை உடை அணிந்து வந்தார். அவருக்கு தண்ணீர் அபிஷேகம் செய்யப்பட்டது. இது உடலையும் மனதையும் சுத்தமாக்கும் சடங்காகக் கருதப்படுகிறது.

அந்நாட்டின் தலைமை பெளத்த மடாதிபதி புனித நீரை மன்னர் வாஜி தலையில் ஊற்றி அபிஷேகம் செய்தார். இதனைத் தொடர்ந்து பிராமண சடங்குகள் மேற்கொள்ளப்பட்டது. நிர்வாகத்தினர் அனைவரும் வெள்ளை உடையில் காட்சி அளித்தனர்.

தற்போது 66 வயதாகும் வாஜி, தந்தை பூமிபோல் அதுல்யாடெஜ்-ன் இறப்புக்குப் பின்னர் முடி சூடுனார்.

1782ம் ஆண்டு உருவான சரியா மன்னர் வம்சத்தின் 10 -வது மன்னரான வாஜி தற்போது பதவிவகித்து வருகிறார். கடந்த 700 ஆண்டுகளில் தாய்லாந்து நாட்டில் இவ்வளவு காலம் நீடித்த ஒரே மன்னர் வம்சம் இதுதான் என்கிறார் பிரபல தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணர் சுலாக் சிவாராக்.

அடுத்த செய்தி